tag:blogger.com,1999:blog-73381028097702781362024-03-12T19:28:00.442-07:00என் சிந்தனைகள்Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-24326109529624649122018-08-30T21:53:00.001-07:002018-08-30T21:53:46.147-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீண்ட இடைவெளிக்குப்பின்... <br />
இந்தப்பகுதியில் என் சிந்தனைகளைப் பதிவு செய்து எவ்வளவோ நாட்கள் ஓடிவிட்டன. கடந்த ஆறு நாட்களாகப் பிரயாணங்களில் இருந்தேன். எழுத்தாள நண்பர் உதயசங்கரின் மகள் உ.நவீனா திருமணம் கோவில் பட்டி நகரில் ஆகஸ்ட் இருபத்தைந்து அன்று நடந்தது. நான் முந்தைய நாளன்றே அங்கு போய்த் தங்கினேன். கோணங்கி, கவிப்பித்தன் ஆகியோருடனும், நாடகக்கலைஞர் முருகபூபதியுடனும் அன்று நீண்டநேரம் உரையாட முடிந்தது. திருமண நாளன்று ஏராளமான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அங்கு வந்திருந்தனர். வண்ணதாசன், தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா , ஷாஜகான் , சு.வெங்கடேசன், நாறும்பூநாதன், கலாப்பிரியா, போப்பு, அப்பணசாமி, சாரதி , வாத்தியார் க்ரிஷி, மாரீஸ் ... இந்தப்பட்டியல் வெகு நீளம். திருமண நிகழ்ச்சிகளை மிக வித்தியாசமான முறையில் உதயசங்கர் திட்டமிட்டிருந்தார். மாப்பிள்ளை கண்ணன் ஒரு புகைப்படக்கலைஞர். அவர் எடுத்திருந்த இருபத்தைந்து புகைப்படங்களையும், நவீனா வரைந்த அதே எண்ணிக்கையிலான ஒவியங்களையும் தேர்ந்தெடுத்து ஒரு கண்காட்சியாக அமைத்திருந்தனர். நூல்வனம் மணிகண்டனின் புதிய புத்தகங்களின் காட்சியும் விற்பனையும் இருந்தது. கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் அமுதகானம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் பின் தலைவர்களின் உரைகள் என்று நிகழ்வு முழுவதுமே கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தன. புகைப்படங்களிலும், ஓவியங்களிலும் நெடுநேரம் சிந்தையைப் பறிகொடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கரிசலின் புதிய பாடல்கள் நெஞ்சை நிறைத்தன. அவரே எழுதி இசையமைத்த ஒரு பாடல் அற்புதம் ஆனால், விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருந்ததால் பாடல்களின் ஆழம் ,இசையின் இனிமை இவற்றை முற்றுமுழுதாக அனுபவித்து உள்வாங்க முடியாமற்போனது. வாசல் ரத்தினவிஜயன் திருமணம் முடிந்தபின், இரவு பன்னிரண்டு மணிக்கு கோவில்பட்டி ரயில்நிலையத்தில் காத்திருந்து என்னை வழியனுப்பியது நெகிழ்வாக இருந்தது. அங்கிருந்து பொள்ளாச்சி பயணம். . அம்மா, அக்கா உள்ளிட்ட உறவினர்கள் அனைவரையும் விஜயன் திருமண நிகழ்வில் சந்திக்க முடிந்தது. பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் கால்வாய்களில் எல்லாம் சமீபத்திய மழைநீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காட்சி மகிழ்ச்சியளித்தது. விபத்துக்குப்பின், சற்றே சிரமங்களுடன் வெற்றிகரமாகப் பயணங்களை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் பெங்களுரு திரும்பினேன். </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-3735412313407605062018-01-31T04:45:00.000-08:002018-01-31T04:45:01.133-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இங்கு நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்,அதன் பிறகு இன்றுதான் மீண்டும் எழுதுகிறேன்.கடந்த பதினான்காம் நாளன்று மோசமான ஒரு சாலை விபத்தில் வலது கால் எலும்பு முறிவுகளை அடைய நேர்ந்தது.இரண்டு அறுவைசிகிச்சைகளையடுத்து படுக்கையிலேயே கழிகிறது காலம். முடிந்தவரை படுத்துக்கொண்டே வாசிப்பது,யூடியூபில் எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்றோரின் சொற்பொழிவுகளைக் கேட்பது என நாட்கள் நகர்கின்றன.<br />
இந்த நாட்களில் நான் வாசித்த ஒரு முக்கியமான புத்தகம், இஸ்மத் சுக்தாயின் " வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை " என்பது. உருது இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற, சர்ச்சைக்குரிய ஓர் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் பல கதைகள் பெரும் எதிர்ப்பையும்,வழ்க்கு களையும் சம்பாதித்திருக்கின்றன, அவரின் சொந்த வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு போராட்டமாயிருந்து வந்திருக்கிறது என்று இப்புத்தகம் முலம் அறிய முடிகிறது.சதத் ஹசன் மாண்டோவைப் போலவே ஐவரும் கடைசிவரை உருது இலக்கியக் கலகக்காரியாகவே இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-28161853433899589412017-09-04T07:14:00.005-07:002017-09-04T07:14:54.876-07:00எழுதிக்கொண்டிருக்கும் காலம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்தப்பகுதியில் நான் என் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது.2015--ஆம் ஆண்டில் இரண்டுமுறை பதிவு செய்ததற்குப்பின் இன்றுதான் மீண்டும் பகிர முனைந்துள்ளேன்.இதற்குப் பல காரணங்கள்.பணிகள், குடும்பத்தில் இடமாற்றம் போன்று எத்தனையோ.மீண்டும் இந்தப்பகுதியில் எழுதுவது என இன்று தோன்றியது.<br />
இந்த இடைக்காலத்தில் நான் மொழி பெயர்த்த இரண்டு முக்கியமான புத்தகங்கள் கடந்த ஜனவரியில் புத்தகக் கண்காட்சியின்போது வெளியாகின. ஒன்று ரொமிலா தாபரின் "சோமநாதர்-வரலாற்றின் பல குரல்கள்" என்ற நூல்.இரண்டாவது அமெரிக்காவில் ஜான் ஹாப்ஹின்ஸ் பல்கலையில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஆனந்த்பாண்டியன் எழுதிய 'திரையகம் ' என்ற புத்தகம்.இரண்டுமே தலா ஐநூறுக்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை. இவைதவிர 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "தட்டுப்படாத காலடிகள்' என்ற சிறுகதைத்தொகுதியும் வெளியானது.இது மலேசியத்தலைநகரான கோலாலம்பூரில் வெளியிடப்பட்டது.கலைஞன் பதிப்பகத்தின் அறுபது ஆண்டு விழாவை ஒட்டி அங்கு நான் உட்பட அறுபது எழுத்தாளர்கள் சென்றிருந்தோம்.எழுத்தாளர் உதயசங்கரின் 'தூரம் அதிக மில்லை" என்ற தொகுப்பு உட்பட அறுபது புத்தகங்கள் அங்கு வெளியாகின.<br />
இந்த மாதம் முதல்தேதியன்று என் "அமைதிக்கு ஒரு சிற்றேடு" என்ற மொழிபெயர்ப்பு நூல்வெளியாகிஉள்ளது.பாரதி புத்தகாலயம் இதை மிக நல்ல முறையில் வெளியிட்டுள்ளது.இதை மொழிபெயர்த்து ஏழு,எட்டு ஆண்டுகள் ஆகியிருப்பினும் இப்போதுதான் பாரதியில் இது நூல்வடிவம் பெற முடிந்துள்ளது.அந்தப் புத்தகம் மதுரை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஐம்பது புதிய புத்தகங்களுள் ஒன்று.<br />
எழுதுகிறேன்;காலமும் எழுதிக்கொண்டிருக்கிறது...! </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-28577776962083873552015-03-01T08:48:00.001-08:002015-03-01T08:48:12.006-08:00இலக்கியம் என்ன செய்யும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இலக்கியத்தின் பயன் என்ன என்பது குறித்து எப்போதும் ஏராளமான கருத்துகள் காலம் காலமாக இலக்கிய வாதிகளாலும் விமர்சகர்களாலும் கூறப் பட்டு வருகின்றன.முதல் நாவல் ஆசிரியர் மாயவரம் முன்சீப் வேதநாயகரின் கருத்துப்படி "சுவையும்,பயனும் அளிப்பது எதுவோ அதுதான் இலக்கியம் ".ஆனால் இன்று நவீன இலக்கியவாதிகள் இக்கருத்தில் பெரும்பாலும் உடன்படுவதில்லை.எழுத்து இந்த சமூகத்தின் எந்த அம்சத்தையும் எந்த விதத்திலும் மாற்றியமைக்கப் போவதில்லை என்பது அவர்கள் கருத்து.இலக்கியம் நேரடியாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரச் சக்தியற்றதாக இருக்கலாம்.ஆனால்,சமூக மாற்றம் வேண்டிப் போராடும் போராளிகளுக்கு உத்வேகம் அளிப்பது,உந்து சக்தியாக இருப்பது இலக்கியமே.உலகெங்கிலும் பெரும் புரட்சியாளர்கள் தங்கள் பணிகளுக்கு உத்வேகம் அளித்த சக்திகளில் முதல் இடத்தைப் புத்தகங்களுக்கு குறிப்பாக மாபெரும் இலக்கியப் படைப்புகளுக்கே அளித்து வந்திருப்பதை நாம் பார்க்க முடியு.ம் .அங்கிள் டாம் இன் காபின் என்ற நாவல் அமெரிக்க கறுப்பின அடிமைகளின் விடுதலைக்கு வித்திட்டது.கார்க்கியின் "தாய்"நாவல் சோவியத் ரஷ்யாவின் புரட்சியில் ஆற்றிய பங்கு உலகறிந்த ஒன்று.வால்டேரும் ரூச்சோவும் பிரெஞ்சுப் புரட்சியின் பெரு நெருப்பில் எண்ணெய் வார்த்த இலக்கியவாதிகள்.இப்படி உலகம் முழுவதும் இலக்கியம் ஆற்றிய பங்கு குறித்த எடுதுக்காட்டுகளைப் பார்க்க முடியும்.பார்க்க வேண்டும். </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-67708085734166394332015-02-04T08:13:00.001-08:002015-02-04T08:13:19.196-08:00புதிய ஆண்டு....புதிய காலங்கள்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புதிய ஆண்டில்,இன்றுதான் எனது முதல் பதிவை இடுவதற்கு முனைகிறேன்.இன்றைய சூழல் புதிய நம்பிக்கைகளைத் தருவதாக ஒரு<br />
புறம் தோற்றம் தருகிறது.மறுபுறம் மத அடிப்படை வாதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.அரசின் எல்லையற்ற அதிகார பலமும்,மக்களின் மத உணர்வுகளும்,கார்ப்பொரேட் ஊடகங்களின் ஆரவாரமிக்க பிரசாரங்களும் இந்த நாட்டின் நீண்ட காலப் பாரம்பரியம் ஒன்றை அழித்துக் கொண்டிருக்கின்றன."யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற நல்லிணக்க உணர்வுதான் இந்த மண்ணின் சுயம்.சாதி,மதம்,இனம் இப்படியான வேற்றுமைகளின் தீ பரவிக் கொண்டிருக்கிறது.பொதுவாக எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இப்படியான நிலைமைகளை எதிர்த்து வலுமிக்க குரலை எழுப்புவதுதான் வழக்கம். ஆனால்,அபூர்வமாக பெருமாள் முருகன் விசயத்தில் விதிவிலக்காக ஒன்றுபட்டு நின்ற எழுத்தாளர்கள், தொடர்ந்து அப்படி இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.கலையும்,இலக்கியமும் மனிதர்களை ஒன்றுபடுத்தி மேன்மையுறச் செய்ய வேண்டும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிளவுபடுத்தி பகைமை வளர்க்க உதவுவதாக ஆகி வருவது அதிகம் ஆகி வருகிற காலம் இது.என்ன செய்யப் போகிறோம்?கேள்வி எழுகிறது.பதில்? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-68163388104198863282014-12-28T07:35:00.002-08:002014-12-28T07:35:27.456-08:00மாதொரு பாகன் நாவலும் பண்பாட்டுக் காவலர்களும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெருமாள் முருகன் எழுதிய ஒரு நாவல்,"மாதொரு பாகன்" என்பது.அந்த நாவல் வந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டன.இப்போது அந்த நாவல் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு காலச் சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.அதில் ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு ஊரில் உள்ள இறைவன் மாதேஸ்வரனை இழிவு படுத்தியும்,குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பண்பாடு குறித்து தவறான சித்தரிப்புகளைச் செய்தும் பெருமாள் முருகன் எழுதி இருப்பதாக ஹிந்துத்வா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.நூலின் ஆசிரியர், பதிப்பாளர் கண்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் இப்போது குரல் எழுப்பி இருக்கிறார்கள்.இவ்வளவு நாட்கள் கழித்து இந்தப் பிரச்னை முன்னுக்கு வந்திருப்பது மிக ஆச்சரியம் அளிக்கிறது.திட்டமிட்டு இப்படி கலைஞ்ர்களையும் ஓவியர்களையும்,படைப்பாளிகளையும் ஹிந்துத்வ அமைப்புகள் குறி வைத்துத் தாக்குவது சமீப நாட்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது.இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ச.தமிழ்ச்செல்வனும் அர்ஜுன் சம்பத்தும் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள்.நூலை படித்தீர்களா என்று தமிழ் கேட்ட போது படிக்கவில்லை என்கிறார் அர்ஜுன் சம்பத்.ஒரு புத்தகத்தைப் படிக்காமல் அது தடை செய்யப்பட வேண்டிய நாவல் என்று சொல்லுகிற இவர்களை என்னவென்று சொல்லுவது? இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்ப் படைப்புலகம் ஒன்று திரள வேண்டும்,ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்.பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகள் இந்த விஷயம் பற்றி எதிர்வினை ஆற்றப் போகிறார்கள்? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-8977147064133971122014-12-18T08:07:00.000-08:002014-12-18T08:07:08.121-08:00தீபம் நா.பார்த்தசாரதி பிறந்த நாள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அமரர் தீபம் நா.பா. அவர்கள் பிறந்த நாள் இன்று.அவர் இருந்த போது ஒவ்வொரு ஆண்டும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது என் நீண்ட கால வழக்கம்.அவரும் உடனே பதில் எழுதுவார்.அந்த மணி மணியான கைஎழுத்துகள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று அவ்வளவு அழகாயிருக்கும்.இன்று தமிழ் இந்து நாளிதழில் அவரைப் பற்றிய விரிவான கட்டுரை வந்திருந்தது எனக்கு வியப்பாய் இருந்தது.நா.பா.வின் தீபம் இதழ் பல எழுத்தாளர்களைப் புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.பலர் தீபம் மூலம்தான் தமிழ் எழுத்துலகில் ஒரு நிலையான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.ஆனால் நா.பா.மறைந்த சில வருடங்களுக்குள் அவரின் நினைவு கூட அவர்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது.இதுதான் உலகம்.அது ஒரு புறம் கிடக்கட்டும்.<br />
நா. பா.என்றொரு படைப்பாளியின் நாவல்களில் இருந்துதான் எனக்கு ஒரு இலட்சிய வாழ்க்கை பற்றிய கனவுகள் கிளைத்தன .குறிஞ்சி மலரின் அரவிந்தன்,பொன்விலங்கின் சத்யமூர்த்தி,மலைச்சிகரத்தின் நவீனன் என்று ஒவ்வொரு நாவலின் நாயகனும் நான்தான் என்ற மனப் பதிவில் திரிந்த காலம் அது.தீபம் இதழை ஒவ்வொரு மாதமும் காத்திருந்து வாங்குவது,வரி விடாமல் படிப்பது,படிதததுமது பற்றி கடிதம் எழுதுவது என்று தான் எனது அலுவல் அட்டவணை இருக்கும்.வாசகர் கடிதப் பகுதியில் அனேகமாக ஒவ்வொரு இதழிலும் எனது கடிதத்தின் சில வரிகள் பிரசுரம் ஆகியிருக்கும்.அதைப் படித்துப் பரவசம் அடைந்த காலம் அதுஇன்று அவர் இல்லை.தீபமும் இல்லை."அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்"என்ற பாரி மகளிர் சோகம் பற்றிய கபிலர் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.அவர் எழுதிய "நானூறில் நல்ல காட்சிகள்' என்ற நூலில் புற நானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எளிய விளக்கங்களுடன் தந்திருப்பார்.ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையின் புனைவுத் தன்மையுடன் இருக்கும்.அதில் ஒரு கட்டுரையின் தலைப்பு,"முல்லையும் பூத்தியோ ' என்பது.புலவர் ஒருவரின் நண்பரின் நினைவு அலை மோதும் உள்ளத்துடன் அவர் என் நண்பன் இல்லாத இந்தச் சமயத்தில் நீ ஏன் பூக்கிறாய் எதற்காகப் பூக்கிறாய் என்று புலம்பும் காட்சியை நா.பா. சோகம் ததும்ப சித்தரித்திருப்பார்.இப்போது நா.பா.இல்லை.ஆனால் அவரின் எழுத்துகள் சாகா வரம் பெற்றவையாய் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன...............தீபத்தின் சுடர் அது.என்றும் அணையாச்சுடர் அது! </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-52391356234914547292014-11-30T06:38:00.001-08:002014-11-30T06:38:08.533-08:00velichathin adiyil iruttu.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வெளிச்சத்தின் அடியில் இருட்டு இன்று காஞ்சிபுரம் இலக்கியக் களம் நிகழ்வில் வெளி ரங்கராஜன் எழுதிய "வெளிச்சம் படாத நிகழ் கலைப் படைப்பாளிகள்"என்ற நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது.நானும், பேராசிரியர் இரா . சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு நூல் பற்றி பேசினோம்.ரங்கராஜன் ஏற்புரை நிகழ்த்தினார்.எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம் அமுத கீதன் இருவரும் நடத்தும் இலக்கியக் களத்தின் முப்பத்தி ஏழாவது நிகழ்வு இது.தோழர் சுந்தா வந்திருந்தார்.மழை கொட்டிய கொஞ்ச நேரம்.சில்லென்று குளிர்ந்த சூழல்.நல்ல மனநிலை வாய்த்தது.காந்தி மேரி,பாவலர் ஓம் முத்துமாரி,கும்பகோணம் பாலாமணி,மதுரை எம்.ஆர்.கமல் வேணி போன்ற பல நிகழ் கலைக் காரர்களின் வாழ்க்கை அனுபவங்களும் அவர்களின் கலை வெளிப்பாட்டு உன்னதங்களும் காலத்தின் போக்கில் வடிந்து சுவடுகள் அற்றுப் போகிற சோகம் பற்றி ரங்கராஜனின் மனப் பதிவுகள் இவை."தீரா நதி"இதழில் தொடராக வந்தவை.கலை வெளிச்சம் ததும்ப வாழ்ந்த ஆளுமைகள் தமது சொந்த வாழ்வின் சோகங்களைப் பொருட்படுத்தாமல் கலை தரும் உன்னதத்தில் தங்களை மறந்து வாழ்ந்து மடிந்து போகிற கதைகள் இவை. மகாபாரதப் பிரசங்கியான ஏ.கே.செல்வதுரை நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். அவரும் ஒரு கூத்துக் கலைஞர் என்பதை அவரின் உடல்மொழி புரிய வைத்தது.ஒரு நிமிடத்தில் துரியோதனன் வேஷத்தில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் தருவும்,அடவும் அவரிடம் கொஞ்சி விளையாடின.தொழு நோய் கண்ட ஒரு கலைஞர் மேடை ஏறி வேஷம் கட்டியதும் துரியோதனன் ஆகவே மாறி சண்டமாருதம் போல் பொழியும் விந்தையை அவரின் நினைவு அடுக்கில் இருந்து நிகழ்த்திக் காட்டினார்.உலகம் மகிழத் தங்கள் கலைகளை அரங்கேற்றும் இவர்களின் சொந்த வாழ்க்கை இருட்டில் உழல்கிற சோகங்களை வெளி ரங்கராஜன் மிகுந்த உணர்வு மயமான தொனியில் பதிவு செய்து கொண்டு போகிறார்.நமது சமகாலக் கலை ஆளுமைகளின் வாழ்வு இருட்டில் இருக்கும் போது கலை மாமணி விருதுக்கு நமது இயல் இசை நாடக மன்றங்கள் யாரைத் தேர்வு செய்கின்றன என்ற கேள்வி முக்கியமானது.விடைதான் கிடைப்பதில்லை.ரங்கராஜன் தேடி அலைந்த அனுபவங்கள் இவை.வாசித்துத் தீராத சோகங்களின் தொகுப்பு. </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-71220001382055637242014-11-04T06:35:00.003-08:002014-11-04T06:35:30.963-08:00 புத்தகங்கள் வாசித்தலும்,அறிமுகமும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பள்ளிக்கூட நாட்களில் இருந்து படிக்கும் பழக்கம் இருக்கிறது.வாய்த்த ஆசிரியர்களும் பள்ளி நூலகமுமே இதற்கு மிக முக்கியமான காரணம் என்றால்,இன்றுள்ள சூழலில் நம்புவதே கடினம்.ஆனால்,என் மனப் பரப்பில் அலையோடும் நினைவுகள் அந்த உண்மையை என்றென்றும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன.வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனது அறியாமைகளை எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது.படிப்பதில் உள்ள மகிழ்வுக்கு சற்றும் குறைந்தது அல்ல,அந்தப் புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதில் உள்ள மகிழ்ச்சி.எனவேதான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் எழதி வரும் கட்டுரைகளில் மிகப் பெரும்பாலானவை நூல் அறிமுகக் கட்டுரைகளாக இருக்கின்றன.அவை விமர்சனங்கள் அல்ல.ஆய்வுரைகளும் அல்ல.அக்கட்டுரைகளை வெளியிடும் இதழ்கள் அவற்றை விமர்சன,மதிப்புரைக்கும் கட்டுரைகள் என்று ஏதேனும் தலைப்பிட்டிருந்த போதிலும்,என்னைப் பொறுத்தவரை அவை அடிப்படையில் ஒரு வாசகனாக நான் உணர்ந்ததை உணர்ந்தபடியே பதிவு செய்யும் முயற்சிகள் மட்டுமே.எந்த ஒரு நூலையும் ஒற்றை வரியில் தண்டம் என்றோ,குப்பை என்றோ தூக்கி எறிவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை.எவ்வளவு மோசமாக எழதப்பட்ட ஒரு நூலிலும் ஒரு வரியேனும் நமக்கு ஒர் உண்மையை,ஒர் அழகை,ஒரு புதிய தகவலை நமக்கு வழங்குவதாக இருக்கும் என்பது என் அனுபவமும் நம்பிக்கையும் ஆகும்.ஆனால்,இந்த அணுகுமுறைதான் சரி என்று நான் வாதிடுவதில்லை.இன்று புகழும் பெரும் பெற்று விட்ட படைப்பாளிகள் சில நேரங்களில் போகிற போக்கில் பெரும்பாலான நூல்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்பது போல தூக்கி எறிவதைப் படிக்கும் போது வருத்தம் எழுகிறது.இன்றைய அவர்களின் வளர்ச்சி நிலையில் அது சரிதான் என்று அவர்கள் கருதலாம்.ஆனால்,இத்தகைய நிராகரிப்புகளால் காயப்பட்டு,கருகிக் காணாமல் போகும் எழுத்தாளர்கள்தான் எனக்குப் பெரும் மனச்சுமையை உண்டாக்குகிறார்கள்.வெளிவந்து கொண்டிருக்கும் நூல்களை முடிந்தவரை வாசகப் பரப்பின் முன்வைப்பது அவசியம்.அது ஒவ்வொரு வாசகனின் கடமை.எஸ்.ஆர்.ரங்கநாதன்,தமிழ்நாட்டின் நூலகத் தந்தை.அவரின் ஐந்து.கட்டளைகளில் ஒன்று,ஒவ்வொரு புத்தகமும் ஒரு வாசகரைக் கொண்டது என்பது.இந்த அடிப்படையில்,ஒவ்வொரு நூலின் மீதும் எங்கிருந்தோ யாரோ ஒரு கருத்தைச் சொல்லத் தவித்து,சொல்லியும்,சொல்லாமலும் இருக்க வாய்ப்புண்டு.அப்படி எங்கேனும் சன்னமாக தயக்கத்துடன்,தாழ்வு மனப்பான்மையுடன் ஒலிக்கும் குரல் கேட்கிறதா சற்று செவி கொடுப்போம் </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-67842456195077299812014-10-25T04:45:00.001-07:002014-10-25T04:45:14.231-07:00meendum en jannalil <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மீண்டும் என் ஜன்னலில்<br />
<br />
இந்த ஆண்டில் இதுவரை மூன்று பதிவுகள் மட்டுமே செய்திருக்கிறேன்.இன்று மீண்டும் என் ஜன்னலைத் திறந்து பார்க்கையில் சென்று மறைந்த நாட்களின் நினைவுகள் அலை மோதுகின்றன.காலம் ஒரு கொடூரம் மிகுந்த சக்தி.அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கும் போது எதைப் பற்றியும் அதற்குத் தாட்சண்ணியம் இருப்பதில்லை.எனது மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொடங் கி கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடி விட்ட போதிலும்,முதல் அங்கீகாரம் சமீபத்தில் "திசை எட்டும்" காலாண்டு இதழின் மூலம் கிடைத்தது.குறிஞ்சிவேலன் எனக்கு "நல்லி-திசை எட்டும்"விருது வழங்கப் பட இருப்பதாகத் தெரிவித்த நாளில் சற்றே உற்சாகம் வரத்தான் செய்தது.ராஜபாளையம் நகரில் செப்டம்பர் பதினெட்டு அன்று விருதை வழங்கினார்கள்.அடுத்த மாதமே இன்னொரு விருதும் அந்த நூலுக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான்.கலை இலக்கியப் பெருமன்றமும்,என்.சி.பி.ஹெச்.புத்தக நிறுவனமும் இணைந்து வழங்கும் மொழிபெயர்ப்பு விருது அக்டோபர் பன்னிரண்டாம் தேதி அன்று வழங்கப் பட்டது.திருச்சியில் நடந்த விழா அது.அறுபதாவது வயதின் தொடக்கத்தில் இப்படி ஒரு விருது வழங்கப் படுவது என்ன விளைவை உண்டாக்கும் என்பது இனி இருக்கிற நாட்களில்தான் தெரிய வரும்.எழுதுவதும்,படிப்பதுமே வாழ்க்கை என்று இருந்து விட்ட பலரும் இறுதிக் காலத்தில் அடைகிற உணர்வு என்னவாக இருக்கும்?பெருபாலும் சோர்வு என்றுதான் தோன்றுகிறது. எனினும் இன்று ஒரு புதிய நூலில் ஒரு பக்கம் படிப்பது கூட ஒரு புத்துணர்வைக் கொண்டு வரத்தான் செய்கிறது.<br />
புத்தகங்கள் செய்யும் மாயம் அது. </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-87921395673066913462014-04-04T09:07:00.001-07:002014-04-04T09:07:08.785-07:00தி. க .சியின் மறைவும் தமிழ் இலக்கிய உலகமும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தி. க .சியின் மறைவும் தமிழ் இலக்கிய உலகமும் பற்றி யோசிக்கையில் பெரும் துக்கம் வந்து மனதில் நிரம்பி விடுகிறது.தி. க. சி. அவர்கள் மறைந்த செய்தி கேட்டதுமே உடனே இறுதி அஞ்சலி செலுத்தப் போவது என்ற முடிவை எடுத்து விட்டேன்.பஸ்ஸில் கிளம்பி மதுரை போனதும் அருண்மணி சாரின் யோசனைப்படி அங்கு பையைப் போட்டு விட்டு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன்.அந்த நகரம் பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகி இருந்ததை உணர முடிந்தது.சுடலை மாடன் தெருவில் நுழைந்தபோது கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கசிந்தது.தி. க.சியின் உடலுக்கு மாலை அணிவித்து விட்டு வண்ணதாசனின் கையைப் பற்றிக் கொண்டு மௌனமாயிருந்தேன்.வேறு என்ன செய்ய?அவரும் மிகத் தளர்ந்து போயிருந்தது நன்கு புலப்பட்டது.கமலவேலன்,நெல்லை.சு.முத்து ,ச.தமிழ்ச்செல்வன்,சு.வெங்கடேசன்,சிகரம் செந்தில்நாதன்,பிரின்ஸ் கஜேந்திர பாபு ,எஸ்.ஏ.பெருமாள்,இளையபாரதி,தோப்பில் முகம்மது மீரான்,ஜனநேசன்,என்று பல எழுத்தாளர்கள் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.மூத்த தலைவர்கள் பழ.நெடுமாறனும்,நல்லகண்ணுவும் வந்து இறுதி ஊர்வலம் தொடங்கும் வரை காத்திருந்தனர்.மிக எளிய விதத்தில் அந்த ஊர்வலம் தொடங்கியது.அவரின் பயணம் முடிந்ததைக் குறிக்கும் ஒரு பயணம் தொடங்கியது ஒரு துயர முரண்.தி.க.சி.ஒரு பாரம்பரியத்தின் இறுதிக் கட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத் தியவரோ என்றுதான் தோன்றுகிறது.அவர் முன்னெடுத்த ஒரு அணுகுமுறையை இன்றைய நவீன எழுத்து முறைக்காரர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.கேலிக்குரிய ஒன்றாக அவர் போஸ்ட் கார்டு பயன்படுத்துவதைக் கிண்டல் செய்த மாபெரும் இலக்கிய எழுத்து வேந்தர்கள்இங்கு அதிகம்.தன்னையும் தனது எழுத்து முயசிகளையும் தவிர வேறு எந்த எழுத்தாளரின் படைப்புகளையும் படிக்கக் கூட நேரம் இல்லாதவர்கள் இவர்கள்.இவர்களால் வேறு ஒரே ஒரு ஆளைக் கூட உத்வேகப்படுத்த முடியாது. மாறாக இடுப்பொடித்து எழுத விடாமல் முடமாக்கதான் முடியும்.ஆனால் தி.க.சியின் போஸ்ட் கார்டுகள் என்னையும் கமலவேலனையும் போல எண்ணற்ற பலரை உத்வேகப் படுத்தியவை.வண்ண நிலவன் கல்கியில் எழுதிய கட்டுரையை அவர்கள் மாச்சரியம் இல்லாமல் திறந்த மனதுடன் படித்தால் போதும்.அவர்களின் மனச் சான்றின் குரலுக்கு செவி சாய்த்தால் போதும். ஆனால்? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-56694057533228566142014-03-13T09:31:00.003-07:002014-03-13T09:31:53.912-07:00கனவுகள் சிறகு விரிக்கும் காலம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த ஆண்டின் இரண்டாவது பதிவு இது.எனது புத்தகம் "தமிழ் நாட்டில் தேவதாசிகள்' வெளியாகி பரவலான கவனம் பெற்றுள்ளது.முனைவர் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தின் மொழியாக்கம் இது.இது தவிர கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூலையும் எழுதி அதை வையவி பதிப்பகம் மூலம் வெளியிட்டு உள்ளேன். பல புதிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.கனவுகள் சிறகு விரிக்கும் காலம் இது.இந்த மாத "புதிய புத்தகம் பேசுது' மற்றும் "உங்கள் நூலகம் 'இதழ்களில் எனது நூல் அறிமுகக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.சதத் ஹசன் மாண்டோ வின் சிறுகதைகளை நண்பர் உதயசங்கர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.உருது மொழியின் இணையற்ற படைப்பாளியான மாண்ட்டோ கதை உலகம் துயரம் நிரம்பியது.இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கைப் பதிவுகள் அவை.அந்தக் கொந்தளிப்பை,அதன் வலியை ,உக்கிரத்தை வெடிப்புறப் பேசுகிற கதைகள் இவை.படிக்கிற போதே நம் குருதியை உறையச் செய்பவை..மதம் என்னும் பேயின் வெறியாட்டம் எப்படி இருக்கும்,என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்று அறியவும் உணரவும் இக்கதைகள் தம்முள் எண்ணற்ற வழிகளை திறந்து விடுகின்றன.உள்ளே நுழைந்து நாம் கவனிக்கத் தொடங்கினால் போதும்.நமது மனச்சான்று விழித்துக் கொள்ளும்.அதன் குரல் நம்மைத் தூங்க விடாது.இந்தப் பூமியில் இனி மானுடம் மதத்தின் பேரால் மோதி மடியாத காலம் வருமா என்று நம்மை ஏங்கச் செய்து விடுகிற கதைகள் இவை.நல்ல கனவுகள் நனவாகும் காலம் வருமா </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-14342070114598506032014-01-29T07:08:00.004-08:002014-01-29T07:08:49.779-08:00புதிய களங்களும் புதிய முயற்சிகளும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்தப் பதிவில் இடுகை இட்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டன.புதிய ஆண்டின் முதல் பதிவு இது.புத்தகக் கண்காட்சியில் எனது மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்திருக்கிறது.முனைவர் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய "தமிழகத்தில் தேவதாசிகள்" என்ற புத்தகத்தை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.வெண்ணிலா முருகேஷ் ஆகியோரின் அகனிவெளியீடாக வந்திருக்கிறது.தமிழ்நாட்டின் பண்பாடு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அம்சம் இந்த தேவதாசிகள் என்ற நிறுவனம்.இது தொடங்கிய போது மிக உயரிய விதத்தில் கலை,இலக்கியம்,நடனம் போன்ற அம்சங்களின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.கோயில் என்ற நிறுவனம் சார்ந்தே தேவதாசிகள் இயங்க வேண்டி இருந்ததால் அவர்களை சுரண்டி எல்லா விதமான ஊழல்களும் வளர்ந்து பெருகி விட்டன.அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசின் வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாக இந்த தேவதாசி அமைப்பு விளங்கி வந்திருக்கிறது.அதன் தோற்றம், வளர்ச்சி,பின் காலப்போக்கில் அதன் சரிவு இறுதியில் அதன் முடிவு என்று எல்லா அம்சங்களையும் இந்த நூல் ஆராய்கிறது.ஏராளமான ஆவணங்களின் துணை கொண்டு எளிய முறையில் இந்த நூலை சதாசிவம் எழுதியிருக்கிறார். </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-10138147293726586292013-12-30T07:47:00.001-08:002013-12-30T07:47:22.437-08:00அகக் கடலில் அலைமோதும் எண்ணங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முக நூலில் போன மாதம் முகங் காட்டினேன்.அதன் பிறகு கடந்த சில நாட்களில் அதில் பல புதிய நண்பர்களின் அறிமுகம் தொடர்கிறது.சற்று முன் ஜீவசுந்தரி அவர்கள் கொடுத்த குறிப்பைப் பார்த்தேன். எந்த ஊரில் நான் வளர்ந்தேன் என்று ஒரு கேள்வியும் இருந்தது.திண்டுக் கல் என்ற ஊரில் பிறந்து வளர்ந்த நான் படித்து அங்கு டெக்னிக்கல் ட்ரைனிங் படித்தேன். சென்னை,வேலூரில் வாழ்க்கை.பின் மீண்டும் சென்னை.இங்கு கடந்த இருபது ஆண்டுகளாக ஓடும் வாழ்க்கை நதி.எழுத்தும் படிப்பும் இரு கண்களாய் இருக்கின்றன.1970 ம் ஆண்டு என் முதல் சிறுகதை மத்தாப்பு இதழில் வந்தது.பின் தொடர்ந்து கல்கி,குங்குமம், தீபம் செம்மலர்,சிகரம்,தினமணி கதிர் சுபமங்களா குமுதம் தீராநதி புதிய புத்தகம் பேசுது என்று பல இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் மொசிபெயர்ப்புகளும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.என் முதல் சிறுகதைத் தொகுப்பை மறைந்த "அன்னம்' மீரா அவர்கள் வெளியிட்டார்.பாத்து ஆண்டு இடைவெளிக்குப் பின் "நம் எல்லாரிடத்திலும் ஒரு சிற்பி கட்டுரைத்தொகுப்பை ஸ்ரீநிவாசன் வெளியிட்டார். தொடர்ந்து பன்னிரண்டு புத்தகங்கள் வந்து விட்டன. உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வரலாற்று நூலும் மிச்சம் மீதி என்று ஒரு வித்தியாசமான வரலாற்று நூலும் வந்துள்ளன. கடைசியாக வந்திருப்பது ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூல்.எழுத்துக் கலை என்ற ஜீவ நதியின்கரை ஓரம் நின்று நீர் அள்ள முயலும் தாகம் நிறைந்த ஒரு மனிதன் என்பதற்கு மேல் இப்போது வேறு என்ன எழுத? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-63486391734082827682013-12-03T08:42:00.003-08:002013-12-03T08:42:43.042-08:00குயில் பாட்டும் புது மின்னலும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்தப் பதிவில் எனது இடுகை இடம்பெற்று நீண்ட காலம் ஓடி விட்டது.எண்ணங்கள் என்னவோ அலைமோதிக் கொண்டுதான் இருக்கின்றன.அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன் என்று பொன்னியின் செல்வன் வரும் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.படிக்கும் ஒவ்வொரு புதிய புத்தகமும் நமது சிந்தனைகளைக் கூர்மை ஆக்குகின்றன.கல்கத்தா சு.கிருஷ்ணாமூர்த்தி எழுதிய என் வாழ்க்கைப் பயணம் புத்தகமும் அவ்வாறே எண்ணற்ற நினைவு அலைகளை எழுப்பியது.தீபம் பத்திரிகை அதில் வந்த பல முக்கியமான படைப்புகள் பற்றிய பதிவுகளை அவர் செய்திருக்கிறார்.வேறு பல புத்தகங்களையும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.உதயசங்கர் மொழி பெயர்ப்பில் சதாத் ஹசன் மோண்டோ கதைகள் நூலும் அவற்றில் ஒன்று. சிவப்பு மழைக் கொட்டு அணிந்த பெண் என்ற கதை உட்பட அவரின் மிக முக்கியமான கதைகளை உதயசங்கர் மிக உணர்ச்சித் துடிப்புடன் தமிழில் தந்திருக்கிறார்.இன்னும் முழுமையாகப் படித்து முடிக்க முடியவில்லை.இன்று மகாகவி பாரதியின் குயில் பாட்டு நீள் கவிதையை மீண்டும் எடுத்துப் படித்தேன்.புதுமின் என்ற சொற் பிரயோகம் நெஞ்சில் பதிந்தது.இதே பிரயோகத்தை ச.து.சு.யோகி தன பாடல் ஒன்றில் பிரயோகித்ருக்கிறார்.குழ்ந்தை யின் மென்னுடலை புதுமின் போல் வளயுமுடல் என்கிறார்.மின்னல் என்பதே ஒரு புதுப் பாய்ச்சல்தான். அதில் புது என்பதும் செரும்விந்தையை இந்த இரு கவிகளும் வியந்து பாடுகிற அழகை வியக்காமல் இருக்க முடியவில்லை.</div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-33250335179134887472013-09-16T08:55:00.003-07:002013-09-16T08:55:39.901-07:00புவியரசின் மொழியாக்கம் உதயசங்கரின் தொகுப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரண்டு நாட்களுக்கு முன்பு புவியரசு எழுதிய ஒரு பிரசுரம் கிடைத்து அதைப் படித்துப் பார்த்தேன்.தச்தய்வேஸ்கி எழுதிய கரமசோவே சகோதரர்கள் நாவல் மொழிபெயர்ப்பு பற்றிய முன்னோட்டம் அது.இந்த நாவல் மற்றும் "குற்றமும் தண்டனையும் " இடியட்" வெண்ணிற இரவுகள் " போன்ற நாவல்கள் குறித்துப் பல கட்டுரைகளை வாசித்திருந்தாலும் இதன் தாக்கம் மிக வலுவானதாக இருக்கிறது.இதே நாட்களில் உதயசங்கரின் "நினைவு என்னும் நீள் நதி" கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன்.இவை "மீடியா வாய்ஸ்" இதழில் தொடர் ஆக வந்த போதே படித்து இருந்தாலும் இப்போது ஒரே மூச்சில் படித்து முடித்து அசை போடும் அனுபவம் மிக நெகிழ்வூட் டுவதாக் இருந்தது.பாலிய காலம் திரும்ப வராதது.உதயசங்கரின் மொழிநடை மிக இனிமையானது.வெள்ளந்தியான ஒரு சிறு வயது பதிவுகள் மனதை என்னவோ செய்தன.படித்து விட்டு அவரிடம் பேசிய பொது நான் உணர்ந்ததை ஒரு சிறு பகுதியைக் கூட வெளிப் படுத்த முடியவில்லை.மனிதனின் மனம் என்ற புதிரின் விடை தெரிந்தால் நாம் முழுமையாக நமது மன உணர்சிகளை வெளிப்படுத்தி விடலாம்.ஆனால்? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-70985563346941015152013-04-09T08:43:00.002-07:002013-04-09T08:43:44.751-07:00பாடல் எடுத்துப் பாடுக மனமே ....!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாட்டு என்ற பெரும் ஆச்சரியம் குறித்து எப்போதும் நான் பிரமிப்புடன் அணுகி வந்திருப்பவன்.முறைப்படி இசை பயில வேண்டும் என்ற என் கனவு இன்று வரையிலும் கனவாகவே இருந்துவருகிறது.ஆனால் திண்டுக்கல் நகரில் பேராசிரியர் மா.வயித்தியலிங்கன் அவர்களின் அன்புமிக்க ஒரு வழிகாட்டுதலின் விளைவாக சில நல்ல தமிழிசைப் பாடல்களை முறைப்படி பாடும் பயிற்சி பள்ளி நாட்களில் கிடைத்தது.பிறகு இயக்கம் சார்ந்த பணிகளின் போதும்,அறிவொளி மற்றும் அறிவியல் இயக்கப் பணிகளின் போதும் பாட் டு இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் வண்ணம் தினமும் பாடல்களின் உலகில்தான் வாழ்ந்திருந்தேன்.குறிப்பாக நெல்லை கரிசல் கிருஷ்ணசாமி குழுவுடன் வேலூர் மாவட்டம் முழுக்க சுற்றி வந்த ஒரு காலம் பாட்டுப் பெருங்கடலில் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலம்.அதே போல மதுரை மணவாளன் குழுவுடன் அப்போது ஒன்றுபட்ட வடஆற்காடு மாவட்டம் முழுவதும் சுற்றிய நாட்களும் அவ்வாறே.இப்போது நினைத்தாலும் மறுபடி ஒருபோதும் அடைய முடியாத இழந்த சொர்க்கம் அது.சமீபத்தில் ஒரு கட்டுரை எழுத நேர்ந்த சமயத்தில் மீண்டும் எனது பாட்டுலகில் ஒரு மீள்பயணம் சென்று வரும் நல்வாய்ப்புக் கிடைத்தது.அமரர் ஜீவாஎழுதிய பாடல்கள் பற்றி சு.போ.அகத்தியலிங்கம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.அதற்கு ஒரு அறிமுகக் கட்டுரையாக "பாடல் எடுத்துப் பாடுக மனமே"என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதினேன்.அது இந்த மாதம் முதல் வாரத்தின் "புதிய பார்வை"இதழில் வந்திருக்கிறது.எழுதியவன் பெயர் இல்லாமலே வந்திருப்பினும் எனது கட்டுரயில் ஒரு வரிகூட விடுபடாமல் வந்திருப்பது ஒரு சந்தோசம்தானே!நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரை ஒரே மூச்சில் எழுதப்பட்டது.மிக உணர்வுமயமானது. பரிணாமன் பாடல் வரி ஒன்றும்,வேறு சில பாடல்களும் இந்தக் கட்டுரையின் ஊற்றுக் கண்கள்.இதுபற்றி இன்னொரு முறை விரிவாகப் பதிவிடலாம்...!</div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-22049284716685003772013-03-22T08:56:00.000-07:002013-03-22T08:56:05.199-07:00மணிமேகலை ஏந்திய தீபம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மணிமேகலை என்ற தமிழ்க்காப்பியம் என்னை மிகவும் கவர்ந்த மரபு இலக்கியங்களில் ஒன்று.சிலம்பின் வழி அதன் தொடர்ச்சியாகவும் சககவிஞன் ஒருவரின் படைப்பாகவும் அமைந்த காவியம் இது.இரட்டைக் காப்பியங்கள் என்று புகழ் பெற்ற இலக்கியங்கள் இந்த இரண்டும்.மாதவி என்ற ஒரு தனிச் சிறப்பு மிக்க பெண்ணின் மகளாகப் பிறந்து மணிபல்லவத் தீவில் தன முற்பிறவி பற்றி அறிகிறாள். இளவரசன் உதயகுமாரன் தன மீது கொண்ட காதலை ஏற்க மறுத்துத் துறவறம் பூண முடிவு செய்கிறாள். அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சமணமும்,பௌத்தமும் மிகுந்த செல்வாக்குடன் இருந்ததால் அந்தத் தத்துவ அடிப்படையில் பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி தீர்க்க அமுதசுரபி ஏந்துகிறாள்.கொலைப்பழிக்கு ஆளாகி சிறைவாசம் செய்ய நேர்கிறது. எந்த இடையூரையும் பொருட்படுத்தாமல் தன இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு போய் க் கொண்டிருப்பாள் மணிமேகலை.நேற்று ஒரு அறிக்கையின் மீது என் கவனத்தை நண்பர் ஒருவர் ஈர்த்தார்.இந்தியாவின் விவசாயிகள் மக்கள் தொகையில் சுமாராக ஐம்பது சதம்பேர் இருக்கலாம் என்றும் அவர்களுக்கு ஜீவாதாரமாக விவசாயம் இருந்தாலும் அதன் இன்றைய உற்பத்தித் திறன் மிகக்குறைவு என்பதால் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்பது போலவும் கருத்து வெளிப்பட்டிருந்தது.இன்று பிரதமரும் ப.சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளும் சொல்லுவது இதைதான்.இவ்வளவு பெரிய விவசாய நாட்டில் மிகப் பிரமாண்டமான மனித ஆற்றலும் எண்ணற்ற இயற்கை வளங்களும் வற்றாத கங்கை,பிரம்மபுத்திரா போன்ற ஜீவ நதிகளும் நிறைந்த நாட்டில் இப்படி ஓர் அவல நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.உலக மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் அந்த மக்களைப் பார்த்து விவசாயத்தில் நஷ்டம் வந்தால் அதை விட்டு விட்டு வேறு தொழில் செய்யப் போக வேண்டியதுதானே என்று இந்த நாடு சொல்கிறது.இன்று இந்த இருளின் நடுவே மனிமேகளை போன்று ஓர் இலட்சிய தீபம் ஏந்திய கைகள் எங்கே?ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னும் ஒரு விடியல் வரும் என்கிறார்களே அது உண்மையா?என்று வரும் அந்த விடியல்? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-70567748285083272362013-03-14T08:15:00.003-07:002013-03-14T08:15:41.631-07:00எண்ணங்கள் ஆயிரம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்று உதயசங்கர் பேசினார்.வசூரில் இருந்து கவிப்பித்தன் சொன்ன தகவலும் சேர்ந்து சில சிந்தனைகளைக் கிளறின.குழந்தைகள் மீதான கரிசனம் இன்று அதிகம் ஆகியிருப்பது பற்றி உதயசங்கரின் கட்டுரையை மையமாக வைத்து நான் ஒரு இடுகையில் பதிவு செய்திருந்தேன்.அது பற்றி நண்பர் விமலன் ஒரு வரிக்கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்,படைப்பு மனநிலைகள் ஒரு நேரம்போல மறுநேரம் இருப்பது இல்லை.ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை நமக்கு எண்ணற்ற படிப்பினைகளைத் தருகிறது.ஒவ்வொரு நிகழ்வும் படைப்பாளிகளின் மனக்கடலில் பெரும் அலைகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாக இருக்கின்றன எந்த ஒரு நிகழ்வும் இந்த சமூக அமைப்பின் விலைபொருள் என்ற வகையில் இந்த அமைப்பின் அரசியலும் அந்தப் படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன .எனவே ஒரு சமூகப் பொறுப்பு உள்ள எழுத்தாளன் தனது படைப்பில் இந்த மனித வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும் ஒரு கரிசனத் தொடுதான் எழுதியாக வேண்டும்.ஆனால் கலைப்படைப்பின் நுட்பங்கள்,அழகியல் அம்சங்கள் கொண்ட படைப்பாக அது இருக்க வேண்டும்.இது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை.எவ்வளவோ படைப்புகள எழுதிய பிறகும் எழுத உட்காரும் ஒவ்வொரு முறையும் இது பெரிய போராட்டமாகவே இருக்கிறது.படிக்கக் கிடைக்கிற ஒவ்வொரு நல்ல படைப்பும் நமது போதாமையை உணர்த்துவதாக இருக்கிறது.இவ்வளவு நாளாக எழுதியும் நாம் இப்படி ஒரு படைப்பைத் தந்து விட முடியவில்லை என்பது ஒரு சோகம்தானே?வெள்ளம்போலக் கிளம்பி வரும் எண்ணங்களைத் திட்டவட்டமான வடிவில் அழகியலுடன் தர முடியுமா?பாரதி வேண்டிய அந்த "மந்த்ரம் போல் வேண்டுமடா சொல் ஒன்று" என்பது நிறைவேறுமா?அலைமோதுகிற இந்த அகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறும் போதுதான் இந்த அவஸ்தையின் பரிமாணம் பிடிபடுகிறது.ஆனால்..அந்த ஒரு சொல் பிடிபடும் காலம் எப்போது? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-55979700524242393002013-03-11T07:25:00.002-07:002013-03-11T07:25:08.487-07:00குழந்தைகளும் நாமும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குழந்தைகள் சார்ந்த சிந்தனைகள் நிறைந்த நூல்கள் சமீப காலமாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன.சமூகத்தின் கவனம் குழந்தைகளின் மீது கொஞ்சம் திரும்பி இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.இவற்றைப் படிப்பதன் பயன் என்ன என்றால் நமது வீட்டுக் குழந்தைகளின் மீது நமது கவனம் இன்னும் சற்றுக் கூடுதலாகப் பதிவதுதான்.என் அனுபவத்தில் எங்கள் பேரனுடன் செலவழிக்கும் நேரம் எல்லாம் மிகப் புதிய அனுபவங்களைத் தந்து செல்கிற பொழுதுகளாக இருக்கின்றன.தோழர் உதயசங்கர் இளைஞர் முழக்கம் இதழில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் இந்த வகையில் பல ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டி விடுவதாக இருக்கிறது."குழந்தைகளின் அற்புதஉலகில் "என்ற தலைப்பில் அவர் கடந்த 24 மாதங்களாக எழுதிக் கொண்டு வருகிறார்.இந்த மாதக் கட்டுரை கல்வியின் அரசியல் பற்றிப் பேசுகிறது.இந்த அரசியல் நமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் பாதிப்பதாக இருக்கிறது. தங்களின் பள்ளி ஆசிரியருக்கு "எங்களை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க" என்று கேட்டு மாணவர்கள் எட்டுப் பேர் எழுதும் கடிதம் தான் அதே தலைப்பில் வந்துள்ள குறுநூல்.எழுத்தாளர் சாஜகான் தமிழில் கொண்டு வந்த இந்த நூலை மதுரை "வாசல்"பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.இந்தப் புத்தகம் பற்றிய தன சிந்தனைகளை எப்போதும் போல போல் உதயசங்கர் ஆழ்ந்த கேள்விகளை எழுப்பி முன்வைக்கிறார்."ஒருவகையில் இது தோற்றுப் போனவர்களின் முழக்கம்.தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி .கூட்டாகக் கற்பது அரசியல்,தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது"என்று நூலின் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கிறார் உதயசங்கர்.குழந்தைகளுடன் வாழ்வது என்பது எவ்வளவு மகத்தான விஷயம் என்று இப்போதுதான் புரிபடத் தொடங்குகிறது.....தொடர்ந்து யோசிப்போம். </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-10298055400315017752013-03-06T08:20:00.000-08:002013-03-06T08:20:57.313-08:00சாவேஸ் மறைந்தார்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்று காலை ஹுயுகோ சாவேஸ் காலமானார் என்ற செய்தி தெரிந்தது.லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் உதிர்ந்து விட்டது.அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்திற்கு எதிராக லத்தின் அமெரிக்க நாடுகளைத் திரட்டி ஒரு மாற்றுப் பாதை வகுக்க முயன்று அதில் ஓரளவு வெற்றிகளையும் அடைந்த வீரர் அவர்.ஆனால் அவரின் முயற்சிகள் முழுமை அடையும் முன்பே மறைந்து விட்டார்.தொடர்ந்து மார்க்சியம் உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தி என்று நிரூபித்தவர் அவர். </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-84361259599883485112013-02-23T09:34:00.002-08:002013-02-23T09:34:22.096-08:00கலைஞர்களின் வெற்றியும் தோல்வியும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மார்ச் மாத சண்டே இந்தியன் பத்திரிகையில் உதயசங்கரின் நேர்காணல் வந்துள்ளது.படைப்பாளியின் வெற்றி தோல்வி குறித்த அவரின் சிந்தனைகள் நன்கு வெளிப்பட்டுள்ள இந்த நேர்காணலில் மிக நுட்பமான சில விசயங்கள் இடம் பெற்றுள்ளன.முப்பது ஆண்டுகள்;எட்டு கதைத்தொகுதிகள்;ஐந்து கவிதைத் தொகுப்புகள்;குறுநாவல் தொகுப்பு ஒன்று;ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்கள் இப்படி உதயசங்கரின் பங்களிப்பு கணிசமானது.மானுடத்தின் இருண்ட பக்கங்களையும்,ஒளிவீசும் நம்பிக்கைகளையும் கலை இலக்கியத்தைத் தவிர வேறு எதனால் சொல்லி விட முடியும் என்று கேட்கிறார் உதயசங்கர்.இலக்கியத்தில் வெற்றி தோல்வி என்று சமகாலத்தில் கணிக்க முடியாது என்று கருதுகிறார் அவர்.அங்கீகாரம் பெரும் போது உற்சாகம் அடைவதுபோல அலட்சியப் படுத்தும் போது அதே தீவிரமான வலியுடன் அடுத்த படைப்பை நோக்கிப் பயணிக்கிறார் அவர்.கோவில்பட்டி என்ற சிறு நகரின் வெம்மையின்,பெருமூச்சின் அழுத்தம் உதயசங்கரின் படைப்புகளில் வெளிப்பட்டுத் தெரிகின்றன.இப்போது அவர் கதை வசனம் எழுதிய நினைவோடு கலந்து விடு திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.இந்த நேர்காணல் அவரின் இன்னொரு பரிணாமம் என்றால் மிகையில்லை. </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-40714123575842695942013-02-05T08:24:00.000-08:002013-02-05T08:24:31.914-08:00சொல்வனமும் சொல்லாத சோகங்களும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உதயசங்கரின் இரண்டு கட்டுரைகளை "சொல் வனம் " என்கிற இணைய இதழில் நேற்றுப் படித்தேன்.ஒன்று,க.நா.சு.பற்றியது;இன்னொன்று கடல்புரத்தில் நாவல் பற்றியது.உதயசங்கரின் எழுத்து என்றுமே என்னை வசீகரிக்கும் சொல் ஓவியங்கள்தாம்.மனித மனதில் எவ்வளவு சங்கடங்கள் மண்டிக் கிடந்தாலும் அவற்றை மீறி மேல் எழுந்து வரும் அன்பு ஒன்று அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விடும் வல்லமை படைத்த ஒன்றாய் இருக்கிறது.தமிழுக்கு க.நா.சு.செய்த பங்களிப்பு பற்றி உதயசங்கர் பேசியிருப்பது மனதை நெகிழச் செய்யும் விதத்தில் இருக்கிறது.அதே போல வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் பற்றி எழுதியிருப்பது. வண்ணநிலவன் கதைகள் படித்து பரவசமாகித் திரிந்த அனுபவங்கள் உதயசங்கரின் கட்டுரையைப் படித்ததும் மளமளவென்று மனப்பரப்பில் வந்து அலைமோதின.சொல்லில் அடங்காத சோகங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் பிலோமி போன்ற மனுஷிகள் தான் வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றார்கள்.யாவர் வீட்டிலும் தொகுப்பு வந்த ஒரு மாதத்தில் க.நா.சு. அதைப்படித்துப் பாராட்டிய செய்தி ஒன்றை நினைவுக்குக் கொண்டு வந்தது:நமது நண்பர்கள் மௌனம் சாதிக்கும் விதம் பற்றி நிறைய அனுபவங்கள் இருந்தாலும் மீண்டும் அவறை உதயசங்கர் வாரி வெளியே கொண்டுவந்து கொட்டி விட்டார்.படைப்பின் நுட்பங்கள் யாவும் வசப்பட்ட ஒரு எழுத்தாளர் அவர்.அவரின் வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமும் ஒன்றுகலந்து உருவான சொல்வனத்தில் எழில் மரங்களும்,பயன்தரு கொடிகளும்,செடிகளும் செழித்துக் கிடக்கின்றன.எப்போதும்போல நான் அவற்றில் மனம் பறிகொடுத்து நிற்கிறேன்.நடக்கிறேன்.பறக்கிறேன்.இனம்புரியாத ஒரு சோகம் வந்து மனதில் நிறைந்து தளும்பியது </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-90683969474501977452013-02-03T07:34:00.004-08:002013-02-03T07:34:49.788-08:00எழுதிச் செல்லும் கைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உமர்கய்யாமின் ஒரு பாடலை நான் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம்.எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்;அழுது கெஞ்சி நின்றாலும் அதிலொரு எழுத்தேனும் மாற்றிடுமோ என்று வருகிற அந்தப் பாடல் மனித வாழ்வின் விசித்திரங்களைச் சொல்லுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.படைப்பாளியின் கைகள் எழுதிக்கொண்டேதான் செல்லுகின்றன.அவன் படைக்கும் படைப்புகளில் வருகிற மனிதர்களின் வாழ்க்கை இந்த எழுத்தாளனின் கைகளில்.இவன்தான் படைக்கிறான் என்றாலும் தன படைப்பின் போக்கு இவனுக்கு ஓரளவுக்கு மேல் பிடிபடாமல் போகிறது.பாத்திரங்கள் தமது வாழ்க்கையைத் தாமே முடிவு செய்து விடுகின்றன.அவற்றின் போக்கு படைப்பவனுக்கே புதிராக இருக்கிறது.எழுதுபவனின் கைகள் எழுதிகொண்டேதான் இருக்கின்றன.இவனும் இவன் எழுத்தும் என்று அவை தலையில் அடித்துக் கொள்கின்றன.விலகி நின்று கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன.படைப்பாளி திகைத்துப் போகிறான். நான்தானே உன்னைப் படைத்தேன்,நீ இப்படிச் செய்யலாமா என்று இவன் பரிதாபக் குரல் எழுப்பினாலும் அவை இரக்கம் காட்டுவது இல்லை.என்ன ஒரு விசித்திரம்!வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்த கதைதான்!என்றாலும் இந்த எழுத்தாளன் சும்மா இருக்கிறானா?எவ்வளவு பட்டாலும் அறிவு வராத ஒரு ஜென்மம் உண்டு என்றால் அது இந்த எழுத்தாளன் ஒருவன்தான்.என்னவோ இவன் எழுதித்தான் இந்த உலகம் உய்யும் என்று அசட்டு நம்பிக்கை,அவ்வளவுதான்!எனவே அவனுடைய கைகள் எழுதிச் செல்கின்றன! வேறென்ன சொல்ல? </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7338102809770278136.post-48780699569870382992013-01-26T08:10:00.002-08:002013-01-26T08:10:27.946-08:00கண்காட்சி முடிந்தது;வாசிப்பு ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சி முடிந்து விட்டது.பதின்மூன்று நாட்கள் சென்னை நகர பிரதான் சாலையில் மக்கள் வெள்ளம் .அனேகமாக அனைவர் கைகளிலும் புத்தகங்கள்.பூமணியின் "அங்காடி" நாவல் இந்த ஆண்டின் கவனம் பெற்ற நூல்களில் ஒன்று.இந்த முறை நான்கைந்து நாட்கள் அங்கு போனதில் பல விஷயங்கள் கவனத்தில் பதிந்தன.வாசிப்பின் பயனை,சுவையை ஒவ்வொரு வருடமும் கூடுதலான மக்கள் உணர்ந்து வருகிறார்கள்;தீவிர இலக்கிய நூல்கள் வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகம் ஆகி வருகிறது;இளம் வாசகர்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள்.நான் வாசித்த ஒரு புத்தகம் இந்தக் கண்காட்சியில் வெளி வந்த கட்டுரைத் தொகுப்பு.கீரனூர் ஜாகீர் ராஜாவின் "குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை"என்ற அந்தப் புத்தகம்,தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் பற்றி அறிமுகம் செய்கிறது.முதல் சிறுகதை ஆசிரியர் என்று பொதுவாக அறியப்படும் வ.வே.சு.அய்யரின் "குளத்தங்கரை அரசமரம்" கதையில் தொடக்கி,இன்று மிக சமீப காலத்தின் கதை சொல்லிகள் வரை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து மிகுந்த ரசனையுனர்வுடன் எழுதி இருக்கிறார் ஜாகீர்.க.நா.சு.,தஞ்சை பிரகாஷ் ச.தமிழ்ச்செல்வன்,இன்னும் பல படைப்பாளிகளின் கதைகள்,கட்டுரைகள் ,நாவல்கள் பற்றி தன வாசிப்பு அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய கட்டுரை,ச.த .,அன்னா தச்தேவ்ச்கி பற்றிய கட்டுரைகள் மிக நுட்பமானவை.தான் விமர்சகர் அல்ல,ஆனால் சற்றுத் தீவிர வாசகர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்கிறார்.பல படைப்புகளின் அடி நாதம் குறித்து இவர் மிகச் சரியாகவே இனங் காண்கிறார்.தமிழ்ச் செல்வனின் முன்னுரையில் தனது மனதிற்கு நெருக்கமான,தன மனப்பதிவுகளே போன்ற கட்டுரைகள் இவை என்று பாராட்டி இருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.வேறு பல நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.பூமணியின் நாவலை நான் படிக்க வேண்டும் என்று தொழார் பால்வண்ணம் அவரின் பிரதியைத் தந்தார்.சில பக்கங்கள் படித்தும் பார்த்தேன்.மிக முக்கியமான ஒரு படைப்புதான் என்று உறுதிப்பட்டது.வாசிப்பின் இசையில் எப்போதுமே மனம் பறி கொடுப்பவன் நான்.தீராத ஆச்சரியம் அது.வாழ்க்கையின் பல மேடுபள்ளங்களில் இடறி நான் விழுந்த போதெல்லாம் கைகொடுத்துத் தூக்கி விட்ட கரம் வாசிப்பு அல்லவா?இன்று நான் சரிவில் இருந்து மீளவும் அதுதானே கரம் கொடுத்தது?ஜாகீரின் புத்தகத்தை உதய சங்கருக்கும் மணிமாறனுக்கும் சமர்ப்பணம் செய்த்திருக்கிறார் அவர்.தமிழ்ச் செல்வனின் "வலையில் விழுந்த வார்த்தைகள்" புத்தகமும் வந்திருக்கிறது.அதன் முன்னுரையிலும் உதயசங்கர் பற்றிய வரியொன்று வருகிறது.இவை தவிர வேறுபல புத்தகங்களை அறிமுகம் செய்யும் பொருட்டு படிக்க நேர்ந்தது.பிபன் சந்திராவின் இரண்டு நூல்கள்,வே.ஜீவகுமார் காவிரி பற்றி எழுதியது,அணுவின் ஆற்றல் பற்றி ப.கு.ராஜன் எழுதியது,உணவுப் பாதுகாப்பு பற்றி பிருந்தா காரத் முன்வைக்கும் ஏராளமான வாதங்கள்,அதைத் தமிழில் தந்திருக்கும் பெரியசாமித் தோழர்,மார்க்சிய மூல நூல்களைப் படிப்பதற்கு உதவும் மாரிஸ் கான்போர்தின் கைஏடு இப்படிப் பலவும் படிக்க வேண்டியுள்ளது.வாசிப்புக்கு என்றும் முடிவில்லை,வாழ்க்கையைப் போலவே.....! </div>
Kamalalayanhttp://www.blogger.com/profile/08975185011661028781noreply@blogger.com0