Friday, January 6, 2012

இந்தப் புதிய ஆண்டில் என்ன செய்யப் போகிறோம்?

 அதாவது இப்போது  புதிய ஆண்டு ஒன்று பிறந்து ஆறு நாட்கள் ஓடி விட்டன.கடந்த ஆண்டின் பல நிகழ்வுகள் கசப்பானவை.சில நல்ல விசயங்களும் நடந்திருக்கலாம்.நம் மனப்பரப்பில் அவை நிலை கொண்டு நம்மை தொந்திரவு செய்து கொண்டே இருப்பவையாக ஆகியிருக்கும்.இதோ இன்னொரு புதிய ஆண்டு ஒன்று பிறந்துவிட்டது.வரும்போதே தானே புயலுடன் வந்த ஆண்டு.மனித வாழ்க்கையில் பல தருணங்கள் இப்படி ஒன்று கிடக்க இன்னொன்றாய் ஆகி விடுகின்றன.ஒரு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டு விட்டது மிகவும் வருந்த வேண்டிய விசயம்தான்.சக மருத்துவரின் கொலைக்காக வெகுண்டு எழுந்த தனியார் மருத்துவ நிலையங்களின் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்து தங்கள் எதிர்ப்பைத் பதிவு செய்து இருக்கிறார்கள்.ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் கல்கத்தா தனியார் மருத்துவ மனை ஒன்றில் தீப் பிடித்துநூற்றுக் கணக்கில் இறந்து போன சமயம் இந்த மருத்துவர்கள் எங்கே போயிருந்தார்கள்?ஒரு அனுதாபக் குரலைக் கூடஇவர்கள் அப்போது எழுப்பியதாகத் தெரியவில்லையே?இறந்து போன டாக்டர் ஒரு அரசு மருத்துவர்.அவர் நடத்தி வந்த தனியார் கிளினிக்கில் இரண்டு உயிர்கள் பலியாக அவரின் தவறான மருத்துவமே காரணம் என்ற ஒரு கோபத்தில் பாதிக்கப் பட்ட நபர் செய்த செயல் இது என்று சொல்லப் படுவது பற்றி அவர்கள்