Wednesday, August 25, 2010

தலைநகரில் சில தினங்கள்..........!

இந்த மாதம் பதினேழாம் தேதி டெல்லி செல்ல நேர்ந்தது.இருபதாம் தேதி அங்கு அலுவலக முறையிலான கூட்டம் ஒன்று இருந்தது.அதை முடித்த பின் திரும்பும் தேதி இருபத்தி இரண்டு என்று அமைந்தது.டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட நன்மை அல்லது தீமை என்று சொல்லலாம்.நன்மை---அங்கு ஓரிரண்டு தினங்கள் இருக்க முடிந்தது.தீமை?அதைப் பிறகு பார்ப்போம்.இதற்கு முன்பும் நான்கு முறை டெல்லி போய் இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அந்த நகரம் எனக்கு வியப்பையும்,மகிழ்ச்சியையும்,துயரத்தையும்,ஆர்வத்தையும் இன்ன பிற உணர்வுகளையும் தருவது ஆகவே இருந்து வருகிறது.நேரில் டெல்லி அறிமுகம் ஆவதற்கு மிகவும் முன்னதாகவே அந்த நகரின் சில பதிவுகளை ஆதவனின் "காகித மலர்கள்",இந்திரா பார்த்தசாரதியின் "தந்திர பூமி","சுதந்திர பூமி"போன்ற நாவல்கள் வாயிலாக அறிந்து வைத்திருந்தேன்.ஆனால் நேரில் பார்ப்பது,அறிவது என்பது முற்றிலும் வேறு.யமுனை என்னும் நதியின் அழகும்'தாஜ்மகாலின் சௌந்தர்யமும்,செங்கோட்டையின் கம்பீரமும்'ஆக்ரா கோட்டையின் துயரம் பொதிந்த மௌனமும்,லோதி கார்தேனின் பசுமைதொய்ந்த உயிர்த் தாவரங்களும் பார்லிமென்ட், ராஷ்ட்ரபதி பவன் போன்ற பிரம்மாண்டங்களின் அச்சுறுத்தும அதிகாரத் தொனியும் எல்லாமும் ஒரு சாதாரண மனிதனின் மனதில்  தாழ்வு மனப்பான்மையையும், இழப்புணர்வையும்,ஏக்கத்தையுமே  தரக் கூடியவை.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்நடத்துவதற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் அங்கு நடைபெறும் பணிகளும்,அவட்ருக்கானசெலவுகளும் பற்றிய அவலக் கதைகளை ஊடகம்களின் வாயிலாக தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம்.நேரில் பார்கையில் அதன் அவலம் நெஞ்சை பிளந்தது.நவீன,புதிய தாராளமயம்,உலகமயம்,தனியார்மயம் என்ற தாரக மந்திரங்களின் அக்டோபஸ் பிடியில் இன்று நம்மை ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள்.ஆகவே,நாமும்!                யமுனை நதியைப் பற்றிய என் கற்பனைகள் முதல் முறை டெல்லி போனசமயம் சுக்கு நூறாகி இருந்தன.அந்த நதியின் ஒரு ஓரம் சாக்கடை ஒன்று ஓடுவதுதான் அன்று நான் கண்ட யமுனை.ஆனால் இந்த ஒரு வாரமும் ஏன்,அதற்கு முன்பிருந்தே பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மழையின் விளைவாக அங்கு இப்போது அதன் இரு கரைகளும் கொள்ளாமல்,அபாய அளவையும் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.அங்கு மட்டும் இன்றி வரும் வழிஎல்லாம் அணைத்து மாநிலங்களிலும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டே இருக்கிறது.அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் இப்போது நீரில் மூழ்கி கிடக்கின்றன.பெய்தும் கெடுக்கும்,காய்ந்தும் கெடுக்கும் என்று மக்கள் நோகிற சொலவடை எவ்வளவு உண்மை?                          எண்ணங்களின் வெள்ளமும் அதே அளவுக்குப் பிரவாகம் எடுத்துப் பெருகித்தான் பாய்ந்தது.ஆனால் அவற்றை அப்படியே எழுத்தில் கொண்டு வரத்தான் முடியவில்லை...................!

Wednesday, August 11, 2010

kaatru varum paruvam

"காற்று  வரும் பருவம்" என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன்.பாரதி பாலன் எழுதியது.இந்த மண்ணில் வீசும் காற்றில் கூடச் சாதீயம் தன விசக்கிருமிகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.இதன் கொடுமைகள் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.தந்தை பெரியாரும்,அண்ணல் அம்பேத்கரும் இன்னுமிவர்கள் போன்ற பலரும் எவ்வளவோ காலம் இந்தக் கொடுமைக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.ஆனாலும் இதன் விஷம் பரவிக் கொண்டேதான் இருக்கிறது.அதன் oru parimaanathai இந்த naaval ambalap paduthukirathu.   

Tuesday, August 3, 2010

thirunangaiyarin eluthukal......

மூன்றாம் உலகம் என்ற வார்த்தை அரசியல் சார்ந்த ஒரு சொல்லாடல் என்பதே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எனது புரிதலாக இருந்தது. ஆனால் மூன்றாம் பாலினம் ஆக இருக்கும் திருநங்கையர் நடுவே எழுதும் முனைப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அறிந்த பின் இந்தச் சொல்லாடலின் மற்றொரு முனை என் மனதில் பதிந்தது.ப்ரியா பாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலை வாசித்த பொது கூட இந்த உண்மை அவ்வளவு ஆழமாக மனதில் பதியவில்லை.அவர்களில் எழுத்தார்வம் உள்ள சிலரை உற்சாகப் படுத்த வேண்டும் என்றும் எழுதுக்களை சார்ந்த ஒர் உரையாடல் நிகழ்வு நடத்த வேண்டும் என்று ப்ரியா பாபு அழைப்பு விடுத்த போதும் கூட அதன் முழுப் பரிமாணமும் பிடிபடவில்லை.ஆனால் அந்த நிகழ்வின்போது தங்கள் ஏன் எழுத விரும்புகின்றனர்,அவ்வாறு எழுத விடாமல் அவர்களைத் தடுக்கும் சுவர்கள் எவை,எப்படி அந்தச் சுவர்களைத் தகர்ப்பது,எதை எழுதப் போகிறோம்,எப்படி எழுதலாம்,எழுதியவற்றை எப்படி நூலுருவில் கொணர்வது என்றெல்லாம் ஒரு நூறு கேள்விகளுடன் வந்திருந்த அவர்களின் நடுவே பேச முற்பட்ட போதுதான் அந்தப் பொருள் சார்ந்த என் அறியாமைகளை உணர முடிந்தது.எனக்குப் பிடித்த சில படைப்புகள்,அவை சார்ந்த சில உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களால் அதில் பெருமளவு ஈடுபாடு காட்ட முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.அந்த அசிரத்தை ஏன் என்ற கேள்விக்கான விடையை ப்ரியா பாபுவே கடைசியில் சொன்னார்.இலக்கியப் படைப்புகள் என்று எதையும் இன்னும் படிக்காதவர்கள்,படிக்கக் கிடைக்காதவர்கள்,படிக்க நேரமும் உகந்த வாழ்க்கை சுழலும் வாய்க்கaதவர்கள் வாழ்க்கையின் கோரப் பல்சக்கரங்களின் நடுவே அரைபட்டுக் கிடப்பவர்கள் என்ற நிலையில் எப்படி அவர்களால் நமது "உன்னத' இலக்கியங்களில் ஈடுபாடு காட்ட முடியும்?இந்த நிலையில் என்ன எழுதலாம்,எப்படி எழுதத் தொடங்கலாம்,என்னென்ன வடிவங்களைக் கையில் எடுக்கலாம் என்ற பல கேள்விகளும் அதற்கான விடைகளும் அவர்களின் நடுவேதான் இருப்பதாக உணர்ந்தேன்.எனஊடன் வந்திருந்த கருத்தாளர்களும் அதே உணர்வைத் தான் அடைந்திருப்பார்கள்.ஒரு விதை ஊன்றப் பட்டிருக்கக் கூடும்;அவ்வளவுதான்.அது முளைத்துத் துளிர்த்து,பூவும் காயும் கனியும் என்று வளர்ந்தொங்குவது என்று?விடை தெரியாத கேள்வியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.