Wednesday, February 4, 2015

புதிய ஆண்டு....புதிய காலங்கள்..

புதிய ஆண்டில்,இன்றுதான் எனது முதல் பதிவை இடுவதற்கு முனைகிறேன்.இன்றைய சூழல் புதிய நம்பிக்கைகளைத் தருவதாக ஒரு
 புறம் தோற்றம் தருகிறது.மறுபுறம் மத அடிப்படை வாதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.அரசின் எல்லையற்ற அதிகார பலமும்,மக்களின் மத உணர்வுகளும்,கார்ப்பொரேட் ஊடகங்களின் ஆரவாரமிக்க பிரசாரங்களும் இந்த நாட்டின் நீண்ட காலப் பாரம்பரியம் ஒன்றை அழித்துக் கொண்டிருக்கின்றன."யாதும்  ஊரே யாவரும் கேளிர்" என்ற நல்லிணக்க உணர்வுதான் இந்த மண்ணின் சுயம்.சாதி,மதம்,இனம் இப்படியான வேற்றுமைகளின் தீ பரவிக் கொண்டிருக்கிறது.பொதுவாக எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இப்படியான நிலைமைகளை எதிர்த்து வலுமிக்க குரலை எழுப்புவதுதான் வழக்கம். ஆனால்,அபூர்வமாக பெருமாள் முருகன் விசயத்தில் விதிவிலக்காக ஒன்றுபட்டு நின்ற எழுத்தாளர்கள், தொடர்ந்து அப்படி இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.கலையும்,இலக்கியமும் மனிதர்களை ஒன்றுபடுத்தி மேன்மையுறச் செய்ய வேண்டும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிளவுபடுத்தி பகைமை வளர்க்க உதவுவதாக ஆகி வருவது அதிகம் ஆகி வருகிற காலம் இது.என்ன செய்யப் போகிறோம்?கேள்வி எழுகிறது.பதில்?       

No comments:

Post a Comment