Monday, September 16, 2013

புவியரசின் மொழியாக்கம் உதயசங்கரின் தொகுப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு புவியரசு எழுதிய ஒரு பிரசுரம் கிடைத்து அதைப் படித்துப் பார்த்தேன்.தச்தய்வேஸ்கி எழுதிய கரமசோவே சகோதரர்கள் நாவல் மொழிபெயர்ப்பு பற்றிய முன்னோட்டம் அது.இந்த நாவல் மற்றும் "குற்றமும் தண்டனையும் " இடியட்" வெண்ணிற இரவுகள் " போன்ற நாவல்கள் குறித்துப் பல கட்டுரைகளை வாசித்திருந்தாலும் இதன் தாக்கம் மிக வலுவானதாக இருக்கிறது.இதே நாட்களில் உதயசங்கரின் "நினைவு என்னும் நீள் நதி" கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன்.இவை "மீடியா வாய்ஸ்" இதழில் தொடர் ஆக வந்த போதே படித்து இருந்தாலும் இப்போது ஒரே மூச்சில் படித்து முடித்து அசை போடும் அனுபவம் மிக நெகிழ்வூட் டுவதாக் இருந்தது.பாலிய காலம் திரும்ப வராதது.உதயசங்கரின் மொழிநடை மிக இனிமையானது.வெள்ளந்தியான ஒரு சிறு வயது பதிவுகள் மனதை என்னவோ செய்தன.படித்து விட்டு அவரிடம் பேசிய பொது நான் உணர்ந்ததை ஒரு சிறு பகுதியைக் கூட வெளிப் படுத்த முடியவில்லை.மனிதனின் மனம் என்ற புதிரின் விடை தெரிந்தால் நாம் முழுமையாக நமது மன உணர்சிகளை வெளிப்படுத்தி விடலாம்.ஆனால்?