Saturday, October 31, 2009

நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி...

சிற்பம்,சிற்பக்கலை என்கிற வார்த்தைகளைக் கேட்டதுமே,பொதுவாக நமக்கு பாரம்பரியச்சிறப்பு மிக்க கோவில்களில்,தூண்களிலும்,கோபுரங்களிலும்,பிராகாரச் சுவர்களிலும் நிறைந்திருக்கிற கர்ச்சிலைகளே நினைவுக்கு வருகின்றன.அவற்றைப் பற்றி சிர்ப்பக்களை வல்லுனர்கலால்தான் பேச முடியும்;அவற்றை ரசிக்க முடியும்-என்ற உணர்வுதான் நமக்கு இருக்கிறது.

உண்மையில் அது அப்படித்தானா?நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இந்த நுண்கலைகள் பற்றி அறிவதர்க்கோ,உணர்ந்து அனுபவிப்பதற்கோ ஒன்றுமே கிடையாதா?

"அப்படி இல்லை!நம் எல்லோரிடத்திலும் ஒரு சங்கீதக் காரன் இருக்கிறான். சிற்பியும், ஓவியனும் கூட.அதனால்தான் நம்மால் இசையை ரசிக்க முடிகிறது.நாம் போடுகிற சட்டை,பண்ட்டுகளுக்கு கலர்கோம்பிநேடின்,மாட்சிங் பார்க்கச் செய்வது நம்முள் இருக்கும் ஓவியந்தான்...."என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் சிற்பி வல்சன் கொலேரி.

பல புகழ் பெற்ற சிற்பிகளையும்,ஓவியர்களையும் உருவாக்கிய சென்னை கலை-கைத் தொழில் கல்லூரியில் பயின்றவர்தான் இவரும்.சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு,சத்தச் சீரழிவு போன்று இன்றைய நவீன யுகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன்,இந்திய சிற்பக்கலை மரபின் நீண்ட செழுமையான பாரம்பரிய அம்சங்களை உறுதியான அடித்தளமாகக் கொண்டிருப்பது வல்சனின் பாணி ஆகும்.       

"மலபாரில் பாத்தியம் என்ற ஊரில் பிறந்து வளந்தேன். சென்னைக்கு வந்தேன்.போவிருந்தவல்லி ஹை ரோடில் கலை-கைத் தொழில் கல்லுரி வாழ்க்கை.சென்னை நகரில் இடைவிடாத சத்தச் சீரழிவு தாங்க முடியாத சோகமாக இருந்தது.உள்ளூர ஓயாமல் அலறிய ச்ய்றேன்.இந்த ஓயாத சத்த அதிர்வில் இருந்து தப்பிக்க உள்முகமாகப் பயணமானேன்.என்னுடைய முதல் சிற்பத்தை இந்த உளைச்சலை வெளிப்படுத்த உதவிய ஒரு சங்கீதமாகவே பார்க்கிறேன்..."

சிற்பி ஆகத் தன்னை உருவாகிய கல்லுரி அனுபவங்கள் குறித்து மலரும் நினைவுகளில் ஆழ்ந்தவராய் கண்களை மூடியபடி பேசிக் கொண்டே போகிறார் வல்சன்.   "மனித உடம்புக்கும்,அதனுடைய இருத்தலில் அவனறியாமலே பிரதான பங்கு வகிக்கும் புவியீர்ப்பு விசைக்குமிடையே உள்ள உறவைப் பற்றி ஆழ்ந்து கவனித்து வந்திருக்கிறேன்....இந்த இரண்டுக்கும் இடையேயான சீரான உறவு மனித உடலுக்கு அழகைத் தருகிறது.இந்த அழகினை நமக்குக் கிடைக்கும் எந்தப் பொருளிலும்,எந்த வடிவிலும் மறு உருவாக்கம் செய்ய முடியும்...!"என்று சொல்லுகிற வல்சன்,வெண்கலம்,கிரானைட் கற்களிலும் தன் சிற்பங்களுக்கான மூலப் பொருளைத் தேர்வு செய்கிறார்.     

Wednesday, October 28, 2009

மண்ணில் நல்ல வண்ணம்

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்கிறது ஒரு பழந்தமிழ்ப் பாடல்."எந்த மார்க்கமும் தோன்றி இலது;என் செய்கேன்,ஏன் பிறந்தனன் இத் துயர் நாட்டிலே?" என்று பாரதி பாடுகிறார்.காரணம்?

"மாந்தர் பால் பொருள் நோக்கிப்பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை"என்பது பாரதியின் பதில்.விடுதலை வேள்வியில் தன வாழ்வை ஆகுதியாகிய கவிஞன் பாரதிக்கே இப்படி ஒரு விரக்தி ஏற்ப்பட்டது என்றால் சாதாரண மனிதர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

"நான் பிறந்தது இந்த நாட்டில்;இந்த மண்ணை நான் நேசிக்கிறேன்.இங்கிருந்து என்னை வெளியேறுமாறு சொல்கிறீர்களே,நான் எங்கே போவேன்?" இந்தக் கேள்வியை லண்டன் பி.பி.சி. நிகழ்ச்சியில் ஒரு நண்பர் இக கேள்வியை எழுப்பி இருக்கிறார்."மண்ணின் மைந்தர்களுக்கே அந்தந்த மண்ணில் வேலை, வாழ்க்கை,இருப்பிடம்-"--என்று ஒரு முழ்க்கம் இப்போது உலகு எங்கும் பரவி வருகிறது.அயலவர் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களைதமது   மண்ணில் இருந்து வெளியேறுமாறு கூறுவதே இந்த முழக்கங்களின்அடி நாதமாக இருக்கிறது.

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்"என்று வாழ்வின் இலக்கணம் கண்ட மண் நம் தமிழ்  மண்.எனவே இந்த மண்ணின் மைந்தர் என்ற முழ்க்கம் நமக்கு உடன்பாடானதாக இருக்காது.நமக்கு மட்டும் இன்றி உலகில் சக மனிதர்களை நேசிக்கும் எந்த ஒருவருக்கும் ஒப்புக் கொள்ளக் கூடிய கருத்தாக இருக்காது.ஆனால் இன்று உலகின் பல பகுதிகளிலும் இப்படியான மனித விரோதக் கருத்துக்கள் விசிறி விடப் படுவதை நாம் பார்க்கிறோம். இது அறிந்தும் அறியாமலும் பரப்பப் படுகிற போது சக மனிதர்களை விரோதியாகப் பார்க்கும் போக்கு பரவுவதை நாம் காண்கின்றோம்.

உலகின் எந்த மூலையிலும் யாரும் சென்று உழைக்கவும்,பிழைக்கவும்,பகிர்ந்து உண்ணவும்,ஒன்றி நேசித்து வாழ்வும்,அன்பு செய்யவும்,அன்பினால் நனைக்கப் படவும் கூடிய ஒரு சூழ்நிலை நிலவ வேண்டும்.ஆனால் நடைமுறையில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப் படுவதும்,அதை உலகமே வேடிக்கை பார்த்துக் "கவலை" தெரிவிப்பதையும், கண்டனம் தெரிவிப்பதையும் செய்வது அறியாமல் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.

நாம் படித்த எல்லா நீதிகளும்,போர் நெறிகளும்,சர்வதேச நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப்படுவதை கையறு நிலையில் நின்று பரிதவிப்புடன் காண்கிறோம்,ஒரு காலத்தில் உலகப் பொதுமைக்கு சான்றுகள் என்று நாம் நினைத்த நாடுகள் கூட மனித குல விரோதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு மானுடப் படுகொலைகள் நிகழ்த்தியதை காணும் அவலம் நமக்கு நேர்ந்தது,அவரவர் நிலைக்கு நியாயம் கற்ப்பிக்க அவரவர் தரப்பு வாதங்கள் இன்று மயிர் பிளக்கும் "நுண்மான் நுழை புல"நுணுக்கங்களுடன் புவிப் பரப்பெங்கும் பரப்பப் பட்டு வருகிற நேரம் இது.

எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இதயம் பதற இந்த மானுடப் படுகொலைகள் பற்றி யோசிக்கும் ஒருவனின் குற்ற உணர்வுக்கு எது வடிகால்?அரசியல் விர்ப்பன்னர்கள் இந்த நிலைமை பற்றி ஆயிரம் விளக்கங்கள் தரலாம்.அனால் துயரமும் குருதியும் தோய்ந்த இந்தக்கதரல்களை யார் கேட்கப் போகிறார்கள்?இந்த அவல இசையின் சுருதி பிசகிய குறிப்புக்களை எந்தக்கலைஞனால் சரி செய்ய முடியும்?என்றைக்குச் சாத்தியமாகும் அது?

Tuesday, October 27, 2009

மதுர கவியும் முருகபூபதியும்..

தமிழ நாட்டின் கலை இலக்கியப் பிரமுகர்களில் பலரும் இந்திய தேசிய விடுதலைப் போரில்பங்கேற்றவர்கள்.நாடக மேடையிலும் திரைப்படங்களிலும் எழுத்துலகிலும் இசைத் துறையிலும் இப்படி பல துறை விர்ப்பன்னர்கள் தமது விடுதலை ஆர்வத்தை தங்களால் இயன்றவரை தமது துறை சார்ந்தும் மக்களுடன் இணைந்தும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மதுர கவி பாஸ்கர தாஸ்.தமிழ நாடக மேடைப் பாடல்கள்,தமிழ்சினிமாவின் முதல் பாடல் வரிசை,கிராமபோன் ரிக்கார்டுகள் ,என்று ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மதுரகவி,அவரதுடயரிக்  குறிப்புகளை மதுரகவியின் பேரனும் நவீனநாடகக்               கலைஞனும் ஆனா முருக பூபதி தொகுத்துத் தந்திருக்கிறார்.

அன்றைய நாடக உலகம்,அதன் கலைஞர்கள்,அவர்களின் அன்றாட வாழ்க்கை,செலவுகள்,சுக துக்கங்கள்,அவர்களின் கலை வேட்கை,மிடுதலை போரின் நடுவே தமது துறை சார்ந்தும்,வெளியிலும்,அவர்கள் இயங்கிய விதம் பற்றி இந்தக் குறிப்புகள் மிகச் சுருக்கமாகவும்,இயல்பாகவும்,உணர்ச்சி வசப் படாமலும் பேசுகின்றன.

அன்றைய தேசபக்தர்கள் மீது அந்நிய அரசு ஏவிய அடக்குமுறைகள் குறித்து மதுரகவியின் பாடல்கள் எதிர்வினை ஆற்றி இருக்கின்றன.டயரிக் குறிப்புகளில் இருந்து நாம் அன்றைய தமிழ நாடக மேடைக் கலாசாரம் பற்றி அறிய முடிகிறது,

Monday, October 26, 2009

இன்று ஒரு உணர்வு..

இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும் என்று நான் பதிவு செய்த இடுகை பலரின் கவனத்தில் பதிந்திருப்பதில் மகிழ்ச்சி.ஒரு நண்பரின் பின்னூட்டத்தில் இசை என்பது அணைத்து உய்ரினங்களிலும் இருக்கிறது என்று சரியாகவே சொல்லி இருக்கிறார்.இசையால் வசமாகா இதயம் எது என்ற பாடல் வரி நாம் அறிந்த ஒன்றுதானே?   

பாட்டு என்கிற அற்புதம் பற்றி எத்தனை விதமாய்ச் சொன்னாலும் தீராது.மகாகவி பாரத்யின் வார்த்தைகளில் சொன்னால் "பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லை"தானே?வானம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமான இசைத் தோற்றங்களைத் தருகிறது.இரவின் அமைதியில் நாம் கேட்க நேரும் ஒவ்வொரு ஓசையும் ஒரு இசைக்கோலம் காட்டுவதை உணராமல் எப்படி இருக்க முடியும்?

மலைகள்,நதிகள், வனங்கள்,நீரோடைகள்,பறவைகள்,மிதிபடும் சருகுகள்,தொலைவில் ஒளிரும் வெடியின் ஒளியும் ஓசையும்,யாரோ ஒரு தாயின் மடியில் பசிக்கு அழும் குழ்ந்தையின் அழுகையில்,பசி தீர்ந்ததும் அது உதிர்க்கும் சொற்களில்,இப்படி எங்கும் நிறை நாத பிரும்மம் நமது நெஞ்சை நிறைக்கிறது.கண் தெரியாத இசைஞன் நாவலில் பார்வை அற்ற இளைஞனின் உலகம் தாயின் கூர்த்த மதியால் இசைப்பெரலைகள் நிறைந்த ஒரு அற்புத உலகமாக மாறும் விந்தையை விளாடிமிர் கொரலென்கோ மிக நுண்ணிய இசைக் குறிப்புகள் நிரம்பி வழியும் எழுத்து வடிவில் தந்திருப்பார்.

எத்தனை முறை படித்தாலும் அந்த நாவலின்இசை   வெள்ளம் நம் மனப் பரப்பில் பாயும் போது மூச்சுத் திணறுவது தவிர வேறு என்ன செய்ய முடிகிறது? மனம் எதோ ஒரு உணர்வில் கனத்துப் பிரமை பிடிதார்ப் போல் ஆகி விடுகிறது.இந்த உணர்வுகளை எந்த மொழியில்,எந்த வார்த்தைகளில் சொல்ல முடியும்/பேசா மடந்தையே நாம் என்று ஆகி விடுகிறோம் இல்லையா? 

Sunday, October 25, 2009

வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடங்கள்...

வாசிப்பு பற்றி பொன்மணி வைரமுத்துவின் ஒரு கவிதை தினமணி தமிழ்மணியில் வந்துள்ளது.தொடர்ந்த வாசிப்பு என்பது மனிதர்களின் உணர்வுகளில் ஏற்ப்படுத்தும் மாற்றங்கள் பற்றி இக்கவிதை மிக அழகாகச் சொல்கிறது.




"நான் ஒன்றும் நாதஸ்வரம் வாசிக்கவோ புல்லாங்குழல் வாசிக்கவோ பிரியப் படவில்லை. நூல் வாசிக்கும் ஆசை மட்டும் நாள் தோறும் வளர்கிறது.
கதை,கவிதை,கட்டுரை,எதுவாயிருப்பினும் மகிழ்ச்சி!சிறகு கட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி!    
சற்று முன் தின்ற பசும் புல்லை ஆசுவாசமாய் அசை போடும் பசுவைப்போல் படித்ததை நினைக்க நினைக்க ஆனந்தம் பிறக்கிறது.நூல் ஒரு வினோதம்-
படைத்தவன் சொன்னதைச் சொல்லும்; சொல்லாததையும் சொல்லும்.  வாசிப்பு புறத்தில் மறப்பு.அகத்தில் விழிப்பு!  
வாசிப்பு தனிமைத் தவம் ,
தாய்மடி   வானமழை,  ஆழ்கடல் ஊன்றுகோல்  ஞாந தீபம் தேவ கானம் தலை தொட்டு ஆசீர்வதிக்கும் தும்பிக்கை! 
வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்;என் விருப்பத்திற்குரிய வேப்பமரம்;
ஒரு கையில் தேநீர் இன்னொரு கையில் புத்தகம். இதை விடவா ஒரு வாழ்க்கை?! "

இந்தக் கவிதை வாசிப்பையும் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் சந்திக்கச் செய்கிறது.  மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டம்,கிருஷ்ணாபுரம் கிராமம் .அங்கு ஒரு நூலகம். அகால மரணம் அடைந்த தன மகன் நந்தகுமாரின் நினைவாக திரு நவநீத கிருஷ்ணன், அவரது மனைவி இருவரும் சேர்ந்து உருவாக்கிய நூலகம் இது.ருபாய் பத்து லக்ஷம் மதிப்புள்ள பத்தாயிரம் புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாக நவநீத கிருஷ்ணன் சொல்கிறார். மகன் உயிருடன் இல்லாத சோகத்தில் நிலை குலைந்து போகாமல் இப்படி ஒரு காரியம் செய்ய முன்வந்த இருவரும் வாசிப்பின் மேன்மையை உணராதிருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது.




"நூலகமே என் குழ்ந்தை" என்கிறார் நவநீத கிருஷ்ணன். பொதுவாக் நம்மை விரக்தியில் ஆழ்த்தும் ஒரு மீளாத சோகத்தை வென்று நிற்பதற்கு புத்தகங்களின் மீதான ஒரு பிடிப்பு உதவி இருக்கிறதே!  'நூலகங்களுக்குள் ஒரு பயணம்' என்ற எனது   சிறு நூலில் தமிழ நாட்டு நூலக இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.நூலக இயக்கத் தந்தை என்று போற்றப்படும் ச.ரா ரங்கநாதன் அவர்களின் வாழ்க்கை புத்தகமும் ஒரு பெரும் மேதையின் வாழ்வுமினைகிற விந்தையைச் சொல்கிறது.உலக நூலகங்களின் வரலாறு நம் வாசிப்பின் சாத்தியங்கள் எவ்வளவு பிரமாண்டமானவை என்று சொல்லும்.

வாசிப்பின் எல்லைகள் பற்றி ஒரு போது நினைக்காமல் தொடர்ந்து படிக்கும் ஒருவர் எப்படி இயங்குவார் என்பதற்கு ரங்கநாதன்   ஒரு உதாரணம்.அவரது நூல்கள் மட்டுமின்றி அவர் வாழ்க்கையே நூலகம், நூலகம் என்றே துடித்த ஒரு இதயத்தின் கதையாக  இருக்கிறது.கிராம நூலகம் என்ற ஒரு கருதுகோள் அவரின் சிந்தனையில் எவ்வளவு அழுத்தமாக இடம் பெற்று இருக்கிறது?முறையாகப் பராமரிக்கப் படும் ஒரு கிராம நூலகம் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை யுஅர்த்துவதில் எல்லையற்ற சக்தி படைத்ததாக இருக்கும் என்பது ரங்கநாதனின் நம்பிக்கை.

இது வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடமாக இருக்கிறது... இன்று இந்த விதமான இயங்குதல் சாத்தியம் தானா ,தெரியவில்லை... பதில் தேடும் பயணத்தை வாசிப்பு உலகிற்குள் சென்று தொடருவோம்!  

Saturday, October 24, 2009

இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும்..

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி என் சிந்தனைகளில் சில யதார்த்த நிலைமைகள் பற்றிய கவலைகளைப் பதிவு செய்திருந்தேன்.உலகம் முழுதும் பசித்தவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருப்பது பற்றி ஒரு செய்தி நம் கவனத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டதை இந்தப் பகுதியில் பதிவு செய்த போது அது சில ஈர மனங்களில் பாதிப்பை உண்டாக்கும் என்று எதிர் பார்க்கவில்லை.அது போலவே இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகர் மன்னா தே பற்றியும் பதிவு செய்து இருந்தேன்.அந்தக் குறிப்பும் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்று தெரிகிறது.மனிதர்களின் வாழ்வில் இசையும் பசியும் அடையும்    முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.


                                      

இசையாய் தமிழாய் இறைவனைக் காண்கிற மரபு நமது. மாசில் வீணையும் என்று தேவாரம் பாடும்.என் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்கிறார் கண்ணதாசன், ஏழாம் கடலும் வானும் நிலவும் என்உடன் விளையாடும், இசை என்னிடம் உருவாகும் என்று அதே பாடலின் வரிகள் தொடரும். துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்பார் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். என் உணர்வுகளை எல்லாம் கொட்டி நான் பாடியிருந்தும் அதை நீ எப்படிக் கேட்காமல் போனாய் என்று வியந்து போகிறார் தூக்கு மேடைக் குறிப்பில் ஒரு போராளி.இந்த மாதிரி ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் காண முடியும்.




மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் இசை ஆர்வலர்களாக இருப்பது காண முடியும.மோக முள் தந்த தி.ஜானகிராமன், புல்லின் இதழ்கள் எழுதிய கே.பி.நீலமணி, இந்த மாத்ரி தமிழ்ப் படைப்புகள்; கண் தெரியாத இசைஞன் என்ற சோவியத் நாவல் போல பல சான்றுகள் கூறலாம். மன்னா என்கிற வங்க மொழிப்  பாடகரின் தொண்ணூறு ஆண்டு கால வாழ்க்கையில் இசைபற்றுதான் அவரை உந்தித் தள்ளுகிற விசையாக இருந்திருக்கிறது என்பதை அவரின் நேர்காணல் சொல்கிறது. இன்றைய இளம் தலைமுறை இசை கலைஞரான யுவன் சங்கர் ராஜாவின்வார்த்தைகளில் சொன்னால் இசையால் நான் அனைவரையும் சென்று அடைய முடியும்;அனைவர் நடுவேயும் மகிழ்ச்சியைப் பரப்ப முடியும் என்பது தான் செய்தி. இது தன அப்பா இளைய ராஜாவிடம் கற்றுக் கொண்டது என்கிறார் யுவன்.சொல்லி வைத்தார்ப் போல் இசைக்கலைஞர்கள் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது, அதில் வியப்புக்கு ஒன்றுமில்லைதானே?

Friday, October 23, 2009

தமிழில் சில புதிய களங்கள்...

தமிழின் களங்கள் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் வாய்ந்தவை. இன்றைய நவீன வாழ்வின் சில அம்சங்களை இந்த மொழியில் சொல்வதற்கு முயலும் போது இது நமக்கு உகந்த முறையில் வளைந்து கொடுக்குமா என்ற கேள்வி நம் முன் வந்து நிற்கவே செய்யும். இந்த மொழியில் நவீன வாழ்வின் சாத்தியங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும் என நிருபிதவர்களில் சுஜாதாவும் ஒருவர். வேறு பலரும் இந்த வகையில் முயன்று பார்த்து உள்ளனர். ஆனால் சுஜாதாவின் வெற்றி மிக வசீகரமான ஒன்று. அவரை நகல் எடுத்த பலரும் தோற்றுப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.



இந்த நவீன அம்சங்களில் அறிவியலின் பல கூறுகள் அடங்கி உள்ளன. முன்பு ஒரு எழுத்தாளர் கூட்டம் இந்த முறையில் முயன்று வந்தது. அவர்களில் பே.நா. அப்புசாம்யும், தி.ஜானகிராமன்,ஸ்ரீனிவாசன், எ.என்.சிவராமன் போன்றவர்கள் வருவர். இன்றைய தலைமுறையில் இரா.முருகன், ராமானுஜம், இரா.நடராசன், வெங்கடேஸ்வரன், ஆதனூர் சோழன் இப்படிப் பலர் இருக்கிறார்கள். இவர்களின் எழுத்துக்கள் பொது மக்கள் திரளை சென்று சேர்ந்ததா என்பது தனிக் கதை.



ஸ்டீபன் காவ்கிங் இன்று தமிழ வாசகர்கள் அறிந்த ஒரு பெயர்.இதற்கு அவரின் 'காலம்-ஒரு சுருக்கமான வரலாறு' என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூல் ஒரு காரணம். ராஜாஜி கூட அறிவியல் அம்சங்களைத் தமிழில் தர முயன்றவர்தான். ஆனால் அவரின் நடை இன்று பொருந்தி வரக் கூடிய ஒன்றல்ல. தி.ஜானகிராமனின் நடை இன்றும் வாசிக்க சுகமான நடையாக இருப்பதை காணலாம். இந்த விஷயம் பற்றி மேலும் ஆராய்ந்தால் பல சுவையும், பயனும் மிக்க தகவல்கள் கிடைக்கக் கூடும்.

Thursday, October 22, 2009

இசையுடன் இசைந்த வாழ்க்கை...

இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மன்னா தே குறித்து இன்று வந்த பிரன்ட் லைன் இதழில் பர்தா சட்டேர்சு எழுதிய கட்டுரையும் அவருடனான நேர்காணலும் வெளி வந்துள்ளன.ஹிந்தி திரையுலகின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்களில் இவர் ஒரு தனி ரகமானவர் ஆகத் தோன்றுகிறது. இப்போது இவர் வயது தொண்ணூறு.இந்த வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதை அடைந்திருக்கிற இவருக்கு அது ஒன்றும் துள்ளிக் குதித்து மகிழ்கிற ஒரு விசயமாகத் தோன்றவில்லை. அந்த மனநிலையை நான் எப்போதோ தண்டி விட்டேன் என்கிறார்.

தான் பாடிய ஏதோ ஒரு மெலோடியை மும்பை ,பெங்களூர் போன்ற ஒரு பெருநகரின் வீதிகளில் யாரேனும் ஒரு மனிதன் ஹும்மிங் செய்வதைக் கேட்பதுதான் பால்கே விருதை விடப் பெரிய விருது என்கிறார் மன்னா.ராக அடிப்படையில் அமைந்த கிளாசிக்கல் பாடல்களுக்குத்தான் இவர் பொருந்தி வருவார் என்று ஒருஎண்ணம் அன்று நிலவி வந்தது இவரின் வளர்ச்சியில் ஒரு முட்டுக் கட்டையாக இருந்தது போலும். அவரது மனைவி ஒரு கேரளப் பெண்.அவரின் வார்த்தைகளில் சொன்னால் "மன்னா தன இதயத்தில் இருந்து பாடுகிறார்" என்பதே சரி. மற்றவர்கள் நினைத்து போல தான் ஒன்றும் முற்ற முழுக்க கர்நாடிக் கிளாசிக்கல் பாடகர் அல்ல என்கிறார் இவர்.உஸ்தாத் படே குழாம் அலிகான், ப்ம்சென் ஜோஷி அல்லது அமிர்கான் போலத் தான் முழுமையான கிளாசிகல் பாடகர் அல்ல என்பது இவரின் கணிப்பு."நான் அதில் அப்படி ஆர்வமும் கொண்டிருக்கவில்லை" என்கிறார்.




சங்கர் ஜைகிசன் ,சலீல் சௌதரி ,க.ராமச்சந்திர போன்றவர்களின் இசையமைப்பில் தான் பாடிய பெருவெற்றி பெற்ற பாடல்கள் பற்றி மன்னாவும் கட்டுரையாளர் பர்தாவும் நிறையத் தகவல்களை தந்துள்ளனர். தொண்ணூறு வயதிலும் தான் சவால்களை ,சோதனை முயற்சிகளை தான் விரும்புவதாகவும்,தான்உயிருடன் இருக்கும் வரை பாடுவதைத் தொடரப் போவதாகவும் சொல்கிறார்.என்ன ஒரு மன உறுதி/நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது அல்லவா?

Wednesday, October 21, 2009

மாநகர நினைவுகள்...

சென்னை மாநகர நினைவுகள் பற்றி தமிழ்நாட்டின் பல முக்கியமான பிரமுகர்கள் தமது மலரும் நினைவுகள் பலவற்றை ஹிந்து இதழில் எழுதிக் கொண்டு வருகிறார்கள்.இன்று ச.வைதீஸ்வரன் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அகில இந்திய வானொலியின் செய்திச் சேவையை மெரீனா கடற்கரையில் லௌட்ச்பீகர்கள் மூலம் கேட்ட அனுபவம் பற்றி, தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் நாடகம் பற்றி, ச.வி. சகஸ்ரநாமம் பற்றி கோடம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரம் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.சென்னை அன்று ஏரிகளும் குளங்களும் நிறைந்த நகரமாக இருந்த கதையை சொல்கிறார்.




நகரச் சுவர்கள்,விரல்மீட்டிய  மழை, உதய நிழல் போன்ற தொகுப்புக்கள் இவரின் கவிதை படைப்புக்கள் ஆகும்.வேறு பலரும் இவர் போலவே தங்கள் மனச் சுரங்கத்தில் இருந்து அன்றைய சென்னை பற்றி பதிவுகளை எழுதி வருகிறார்கள். அவர்கள் அனைவருமே பெரிய பிரமுகர்கள் மட்டுமே. சாதரணமான மனிதர்களின் மனதில் இந்த நகரம் என்ன விதமாகப் பதிவாகி இருக்கிறது? எப்போதாகிலும் அந்த மாதரியான பதிவுகளை நாம் படிக்கக் கிடைக்குமா?

இந்த நகரம் நான் முதன் முதலில் ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்த இடம்.இங்குதான் அம்பதூரில் ஒருகம்பெனியில்வேலை செய்தேன்.ஆறு மாத காலம் கழித்து வேலூர் சென்று அங்கு பணியில் சேர்ந்தேன். மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து சென்னைக்கு குடும்பத்துடன் வந்து சேர வேண்டியதாகியது. இப்போது பத்தொன்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இந்த நகரம் என் கதைகளில் பதிவாகி இருக்கிறது.குறிப்பாக 'பிணங்களும் விலை போகும்' கதையில்.என் இலக்கிய வாழ்வின் முக்கியப் பகுதிகள் நிகழ்ந்த இடம் இதுதான். நினைவுகள் அழிவதில்லை அல்லவா?

Tuesday, October 20, 2009

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

தமிழ மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பலரையும் பற்றி யோசிக்கையில் இன்று நம் முன் வருகிற சித்திரம் என்ன? புதிய புத்தகம் பேசுது இதழ் சமீபத்தில் வெளியிட்ட தமிழ்ப் பதிப்புலகம் -இரு நூற்றாண்டு  கால வரலாற்றுப் பதிவுகள் இந்த வகையில் ஒரு முக்கிய ஆவணம்.

உ.வே.சாமிநாதையர் சி.வை.தாமோதரம் பிள்ளை, மர்ரே.எஸ்.ராஜம், ஆறுமுக நாவலர், கதிரைவேர்ப் பிள்ளை மற்றும் பல முன்னோடிப் பதிப்பாளர்கள் பற்றிய ஆழமான பல கட்டுரைகள் இந்த மலரில் உள்ளன. மதுரைத் தமிழ்ச் சங்கம்,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம்,உலகத் தமிழ ஆராயிச்சி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்ப் பதிப்புலகிற்கு ஆற்றிய பெரும் பணிகள் பற்றி ஏராளமான கட்டுரைகள் இந்த மலரில் உள்ளன.

இவை எல்லாம் நமது முன்னோடிகளின் அபூர்வப் பங்களிப்பு பற்றி அறிய நமக்கு உதவக் கூடிய ஆவணங்கள். இவர்களில் ஒரு சிலர் நன்கறியப் பட்டவர்கள் என்றாலும் மிகப் பலர் பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்த விதமான விவரமும் தெரியவில்லை என்பதே உண்மை. இந்தக் கவலை மலரைப் படிக்கும் யாருக்கும் எழும்.வெறும் கவலை  அல்லது ஆதங்கம் இந்த நிலைமையில் மாற்றம் எதயும் கொண்டு வராது. இன்றுள்ள சூழலில் நாம் என்ன செய்ய முடியும் என்பதே நம் முன்னுள்ள கேள்வி.

Saturday, October 17, 2009

பசித்தவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்...

இன்று தீபாவளி நாள். பட்டாசுகள் வெடித்து மக்கள் ஆனந்தமாகக் கொண்டாடும் நாள் இது. இது ஒருபுறம்.மறுபக்கம் ஒன்றும் இதற்கு இருக்கிறது.இன்று ஹிந்து நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி நம் கவனத்தை கவராமல் இருந்தால் நமது மனிதத் தன்மை கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கும்.

உலக உணவு தினத்தை ஒட்டி ஒரு ஆய்வு அறிக்கை வந்துள்ளது. இன்னும் பில்லியன் கணக்கிலான மக்கள் ஒரு நாளைக்கு மிக எளிய,குறைந்தபட்சம்,ஒரு நேர உணவு கூடக் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை அந்த அறிக்கை சொல்கிறது. ஒவ்வொரு சில கன நேரத்திற்குள் ஒரு குழ்ந்தை உணவுப் பற்றாக்குறையால் இறந்து கொண்டிருக்கிறது. இது நம் மனதில் ஏற்ப்படுத்தும் உணர்வு என்ன/சில சின்னஞ்சிறு நாடுகள் கூட இந்த வறுமைக்கு எதிரான போரில் ஈடுபட்டு சில வெற்றிகளையும் அடைய முடிந்திருக்கும் போது நம் நாடு இந்தப்போரில் இருபத்து இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது. இந்தச் சுடுகிற உண்மை நம்மில் எத்தனை பேரின் கவனத்தைக் கவரப் போகிறது?

ஒரு புறம் நாம் சந்திராயன் மூலம் நிலவில் நீர் இருக்கிற உண்மையை உலகுக்கே முதன் முதலில் சொன்ன பெருமையை அடைந்து விட்டோம். நமது நாடு வம்சாவளியைச் சேர்ந்த வெங்கட் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்று விட்டார். இன்னும் இது போல் பல பெருமைகள் நமக்கு உண்டுதான். சந்தேகமில்லாமல் இது ஒரு நாட்டின் மக்களின் அறிவு ஆற்றல்,புதியன படைக்கும்  திறன்கள் அனைத்திற்கும் சான்றுகள்தான். ஆனால் இது ஒரு ஓவியத்தின் பிரகாசமிக்க பகுதி மட்டுமே. விளக்கின் அடி இருட்டுப் போல மறு பக்கம் இருள் நிறைந்ததாயிருக்கிறது.

இன்று வந்துள்ள மற்றொரு கட்டுரை வேலை உறுதி வழங்கும் சட்டம் பற்றியது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த திட்டம் செயல்படும் விதம் பற்றி சமூகத் தணிக்கை செய்த அரசு சாரா நிறுவனங்களின் மதிப்பீடு என்ன என்று சொல்கிறது.இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வந்துள்ள ஒரு கட்டுரை சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை  பற்றியது. அங்கு வேலை செய்யும் தொழிலளர்கள் பெரும் கூலி வாரம் ஒன்றுக்கு ரூபாய் மூன்று ஆயிரம் என்றாலும் தீபாவளி முடிந்ததும் இரண்டு வாரம் வரை தொழிற்சாலைகள் மூடி கிடக்கும். அவர்கள் ஏற்கெனவே வாங்கிய கடன்களைத் தீர்க்கவே வாங்கும் சம்பளம் சரியாக இருக்கும். இந்த அம்சம் தவிர வேறு பல அம்சங்களும் இதில் இருப்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. இருபதுகள் வரை பருத்தி விளைவிக்கும் இடமாக இருந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதி இப்போது பட்டாசுத் தொழில் மட்டுமே நடை பெரும் பகுதியாக ஆகி விட்ட துயரம் பற்றி நம் மனதில் என்ன அலைகளை எழுப்புகிறது. இன்று பண்டிகை நாள் என்பது தரும் மகிழ்ச்சியை விட இது போன்ற சமூக அவலங்கள் ஏற்ப்படுத்தும் துயரம் ஆழமானது. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

மகாகவி பாரதியின் இந்த வரிகள் இன்னமும் பொருந்துவதாகவே இருக்கின்றனவே?

Friday, October 16, 2009

அந்நியனும் சில எதிர்வினைகளும்..

நண்பர் மாதவராஜின் ப்ளாக் ஸ்பாட்டில் சற்று முன் பார்த்த போஸ்ட் பற்றி கொஞ்சம் சொல்லத் தோன்றுகிறது. தமிழரான வெங்கட் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றது பற்றி பெருமிதம் அடைந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான தமிழ மக்கள் அனுப்பி வருகிற மின்னஞ்சல் கடிதங்களால் எரிச்சல் அடைந்து அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒரு விவாதப் புயலையே கிளப்பி விட்டன.ஏராளமான நண்பர்கள் வெட்டியும் ஒட்டியும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். என் கருத்திற் வெங்கியின் எரிச்சல் வேறு விதமாகப் புரிந்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு  இருக்கிறது என்பதே! ஒருவர் தன பிறந்த மண் குறித்துப் பெருமிதம் அடைவது என்பது பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்ட ஒன்று என்று தோன்றுகிறது. வெங்கியின் இந்த வெளிப்பாடிற்குப் பின்னால் அவர் தரப்பு நியாயங்கள் என்ன என்று தெரியவில்லை.

இந்த மண்ணில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் எத்தனை பேருக்கு அது பற்றிப் பெருமிதம் இருக்கிறது? ஆழமாக யோசிக்கையில் இன்று பலருக்கு இது பற்றி யோசித்து எதிர்வினையற்ற அவ்வளவு வசதியான வாழ்க்கை அமைந்திருக்கிறதா என்ன? வெங்கியின் கருத்து சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்க இதை விடவும் பொறுப்பற்ற முறையில் எழுதிக் கொண்டிருக்கும், ஏற்க்கெனவே எழுதிய பலர் விசயத்தில் இம் மாதிரி எதிர்வினைகள் வந்தனவா? உயரும் விலைவாசி பற்றி எழதும் நம் சக எழுத்தாளர்கள் பற்றி சாறு நிவேதிதா ஒரு முறை மிக மோசமாக நக்கல் செய்த போது எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் அது பற்றிக் கோபப் பட்டார்கள்? நமது மண்ணில் வாழ்ந்து கொண்டு நமது மொழியில் எழுதிக்கொண்டு நமது மக்களின் வாழ்வியலைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஜெயமோகன்கள் பற்றி எத்தனை பேர் கொதித்து எழுந்து எதிர்வினையாற்றினார்கள்? மிகவும் சுலபமாக இது பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் எதுவுமுமே நடக்காதது போலத் தானே பலரும் இருந்திருக்கிறார்கள்? எங்கோ வாழ்ந்து கொண்டு தன ஆராய்ச்சியின் வெற்றியால் தலை கனத்துப் போனவரின் கருத்து என்று வெங்கியின் அலுப்பைப் புறம் தள்ளி விட்டு நாம் நமது மண்ணில் நம்மிடையே வாழ்ந்து கொண்டே நம் மக்களின் வாழ்வியல் கூறுகள் பற்றியோ, அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றியோ கவலைப் படாமல் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கும் "மாபெரும் எழுத்தாள சிகரங்களின்" தோலை உரிக்க வேண்டிய கடமையின்பால் கவனத்தைத் திருப்புவது நல்லது  

Thursday, October 15, 2009

புலம் வழங்கும் புத்தகங்கள்

புலம்
லால்கர் ஒரு மூன்றாவது பார்வை என்ற புத்தகமும் அரசு,இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள் என்ற புத்தகமும் மார்க்ஸ்-எழுதிய புதிய நூல்கள். சமீப நாட்களில் ஊடகங்களில் மிகவும் அடிபட்ட விஷயங்கள் குறித்து மிக ஆழமான முறையில் மார்க்ஸ் எழுதி இருக்கிறார்.வன்முறை என்பது இன்றுள்ள சூழ்லில் அரசு பயங்கர வாதத்திற்கு மட்டும் பயன்படுகிற ஒரு ஆயுதமே தவிர சமூக மாற்றம் வேண்டிப் போராடும் இயக்கங்கள் தமது இலட்சிய நிறைவேற்றத்திற்கு பயன்படுத்தக் கூடிய ஆயுதமாக இல்லை என்ற வாதத்தை மார்க்ஸ் முன் வைக்கிறார்.நடைமுறை அனுபவங்களில் இருந்து இன்னும் நக்சல் இயக்கங்களும் மாவோயிஸ்ட் இயக்கங்களும் பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே நம் ஆதங்கமயிருக்கிறது.

அரசு எப்போது வன்முறையைக் கையில் எடுக்கிறது? மக்களிடம் தனது பிடி தளர்கிறது என்று உணர்கிறதோ அப்போதுதான்,அதுவரை அரசு மக்களின் ஒப்புதலுடன் தன் அதிகாரத்துறை ஆளுகையை மக்கள் மீது செலுத்திக் கொண்டு இருக்கிறது.எனவே அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிரான ஒரு இயக்கம் வெற்றி அடைய வேண்டுமானால் அந்த முடிவுகளுக்கு மக்களின் ஒப்புதல் கிடைக்கக் கூடாது.அந்த வகையில் சமூக மற்றத்ர்க்கான இயக்கங்கள் எதிர் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இரக்க வேண்டும்.ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதே சோகம்.மார்க்ஸ் இந்த உண்மையை மிகக் கூர்மையாகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கிறார்.

சிறிய இரு நூல்களும் மிகச் செறிவான முறையில் எழுதப்பட்டு இருக்கின்றன.இந்த உண்மைகள் ஏன் போராளிகளுக்குப் புரியவில்லை என்ற கேள்வி நமக்கு எழும்.அதற்கும் மார்க்ஸ் பதில் சொல்லி இருக்கிறார்.இன்றைய போராளிகள் தீவிரமாக் எதயும் படித்து மக்களின் நிகழ கால வாழ்வு பாதிக்காமல் எதிர் கால லட்சியங்களின் வெற்றிக்குப் போராடுவது கிடையாது என்பதே மார்க்ஸ்ன் அவதானிப்பு. இன்றுள்ள நிலையில் மிகக் கவலையுடன் யோசிக்க வேண்டிய பல செய்திகளை மார்க்ஸ் எழுதி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரே ஒரு பிரச்சினை என்ன என்றால் இந்த இரு நூல்களிலும் இழையோடும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு என்பதுதான். இது பற்றி விரிவாகப் பார்கத்தான் வேண்டும்.   

Sunday, October 11, 2009

ஒரு இடைவெளிக்குப்பின்.

அக்டோபர் 5 ஆம் நாளுக்குப்  பிறகு, இந்தப்பகுதியில் எதையும் எழுத முடியவில்லை. என்ன காரணம் என்றே தெரியாமல் ஒரு சோர்வு. நம் சிந்தனைகளில் ஓடுகிற அனைத்தையும் எழுதுவதால் என்ன விளைவு ஏற்படப்போகிறது? இலக்கியம் ஒரு கருவியாக நம் சிந்தனைகளைப் பிறர் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது.பிறர் சிந்தனைகளை நம் கவனத்தில் பதியக் கொண்டு வந்து சேர்க்கிறது.யாரோ எதிலோ எழுதும் விசயங்களில் நல்ல அம்சங்கள் இருப்பின் அது பற்றி நம் மனதில் ஓடும் எண்ணங்களை எழுதியவருடன் பகிர உதவுகிறது.அந்த வகையில் இந்த மாத புதிய ஆசிரியன் இதழில் தோழர் எஸ்.வி.வி. எழுதிய "பஞ்சமும் நோயும் மெய்யடியார்க்கோ" என்ற கட்டுரை படித்ததும் அது பற்றி அவருக்கு மெயில் மூலம் என் கருத்தைக் கொண்டு சென்றேன். அவரும் படித்து விட்டு தனது மகிழ்ச்சியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.இலக்கியம் என்பது இப்படி ஒரு அசைவை நிகழ்த்துகிறது.படித்து நீண்ட காலம் ஆகியும் நம் மனதில் அதிர்வுகளை ஏற்ப்படுத்தும் படைப்புகள் பல உண்டு.அவற்றின் தாக்கம் நீண்ட நாட்கள் ஆகிய பின்னும் ஒரு சிறிதும் மங்குவதில்லை.நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல் ஒரு உதாரணம். கன்னட மொழியில் நிரஞ்சனா எழுதிய சிரச்மரனே என்ற நாவலின் தமிழ மொழி பெயர்ப்பு இது.தமிழில் மொழி பெயர்த்தவர்   ப.ர.பரமேஸ்வரன் அவர்கள்.இந்த நாவலின் களம் பிரிடிஷ் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் நடந்த ஒரு உண்மைச்சம்பவம்.விவசாய சங்கம் அமைத்த இளம் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தங்களின் நிலம் பிடுங்கப்பட்ட பின் அடைந்த வேதனையை சொல்கிறது.அவர்களும் அந்த கிராமத்தின் பிற விவசாய மக்களும் நடத்துகிற இயக்கம்,அதை நசுக்க பிரிடிஷ் ஆட்சி எடுக்கும் நடவடிக்கை,அதில் ஏற்ப்படும் ஒரு துரதிர்ஷ்ட வசமான சம்பவம்,அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலிஸ் எடுக்கும் கொடூரமான அடக்குமுறை,இறுதியில் அந்த நான்கு வீர இளைங்கர்களும் தூக்கு மேடை செல்லும் முடிவும்தான் நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல்.இதை எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று சொல்ல என்னாலேயே முடியாது.அத்தனை முறை படித்தும் புதிதாகப் படிப்பது போலத்ததான் ஒவ்வொரு முறையும் இருக்கிறது.நாவலை எழுதிய நிரஞ்சனா,அதை ஒரு கம்யூனிஸ்ட் பிரசார நாவல் என்று சிலராவது சொல்லவாய்ப்பு இருக்கிறது என்றும்,அனால் அதை எழுதிய போதும் சரி,அந்த உண்மை நிகழ்வை அருகில் இருந்து பார்த்த போதும் சரி,தான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்றே சொல்கிறார்.தான் கண்ட ஒரு உண்மை நிகழ்வை தன மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்,அவ்வளவுதான்.அந்த நிகழ்வில் கண்ட அந்த மக்களின் துயரம் அவர் மனதைப் பாதிக்கிறது.சார்பு எதுவும் இல்லாமலே அவரின் நாவல் உண்மைகளை அந்தரங்க சுத்தியுடன் சொல்கிறது.இந்த நாவலில் இறுதிக்கட்டம் படிக்கிற யாரையும் உலுக்கி விடும்.தேஜஸ்வினி என்கிற நதி இந்த நாவலில் வெறும் ஒரு நதியாக மட்டும் இன்றி ஒரு பாத்திரமாகவே மாறி விடுகிறது.நாவலாசிரியரின் மகளுக்கு தேஜஸ்வினி என்று பெயர் வைத்திருக்கிறார் என்றால் அந்த நதியும் நதிக்கரை மக்களும் எவ்வளவு தூரம் அவரைப் பாதித்திருக்க வேண்டும்?தேஜஸ்வினி இன்று நன்கு அறியப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர்.நிரந்ஜனாவின் நாவலை அவர் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார்."நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன"என்பது ஆங்கில மொழி பெயர்ப்பின் தலைப்பு.நாவலின் இறுதியில் தூக்கில் இடப்பட்ட சிருகண்டனின் மனைவி தன குழ்ந்தையிடம் வானில் தெரிகிற நட்சத்திரங்களைக் காட்டி "அதோ தெரிக்றார் பார் உன் அப்பா.அருகில் தெரிகிறவர்கள் அவரின் நண்பர்கள்" என்று சொல்லுவாள்.நம் கண்கள் குளமாகி விடும்.நெஞ்சமெல்லாம் வலிக்கும்.வரலாறு நெடுக உழைக்கும் மக்கள் தமது நியாயமான உரிமைகளைக் கூட தமது உயிரைக் கொடுத்த பிறகுதான் அடைகிறார்கள்;அல்லது உயிரைக் கொடுத்த பிறகும் கூட உரிமைகளை அடைய முடியாமலே இருக்கிறார்கள் என்பதை நாவல் மெளனமாக உணர்த்துகிறது.இலக்கியம் செய்கிற மாயம் இது.எழுத்து என்றால் அது இப்படி இருக்க வேண்டும் என்று நாம் உணர்கிறோம்.என்னை இடைவிடாமல் யோசிக்க வைக்கும் ஒரு சில் புத்தகங்களில் இதுவும் ஒன்று.இப்படி எழுத முடிந்தால் அந்த வகை எழுதுக்களை எழுதுவது பற்றி நாமும் யோசிக்கலாம்.இன்று காலையில் ஒரு கூட்டத்தில் வகுப்பு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்த போது இந்த நாவலின் பாத்திரங்கள் பற்றியும்,என் வாழ்வில் நான் சந்தித்த சில முக்கியமான தலைவர்கள் பற்றியும் அவர்களின் தன்னலம் அற்ற போது வாழ்க்கை பற்றியும் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன்.மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு உத்வேகம் தருகிற புத்தகங்களில் இந்த நாவலும் தூக்கு மேடைக் குறிப்பு என்ற நினைவுக் குறிப்பு நூலும் முக்கியமானவை.இந்த நூல்கள் பற்றி நினைத்த உடனே வேறு சிந்தனைகளே எழாத வகையில் மனம் நிரம்பி விடுகிறது.............நினைவுகள் அழிவதில்லை நாவலின் முன்னுரையில் ஆசிரியர் வாசகர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புவார்:"இந்த வீர நினைவுகள் உங்களுக்குத் தரும் உணர்வுகள் என்ன? நீர் நிரம்பிய கண்கள் மட்டும்தானa? ஓங்கி உயர்த்திய கரங்களும் கூடத்தான்"என்று வரும் வரிகள் நம் மனதில் பிரளயம் போல் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கின்றன.நாவலின் இன்னொரு இடத்தில இப்படி வரும்:"நாம் சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரு போதும் சொல்ல முடிவதில்லை;நாம் கண்ணீர் வடிக்க வேஅண்டும் என்று நினைத்த போதெல்லாம் அழுதிருந்தால் தேஜஸ்வினி நதியில் வெள்ளம் பிரளய கால் வெள்ளமாயிப் பெருகியோடி இருக்கும்.அனால் நாம் செய்ய நினைப்பதை எல்லாம் செய்து விடுவதும் இல்லை" இப்படி வரும் வரிகள் நிறைய்ய....!                     

Monday, October 5, 2009

படிப்பும் பாதைகளும்

வாசிக்கிற அனுபவம் ஒரு மனிதனிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி பலரும் சொல்லி இருக்கிறார்கள். நல்ல ஒரு கவிதை, படித்து நீண்ட காலம் ஆகிய பின்னும் நம் மனதைக் குடைந்து கொண்டே இருப்பதை பல நேரங்களில் உணர முடிந்திருக்கிறது. ஒரு நாவல் ஏற்ப்படுத்தும் பாதிப்பு வாழ்நாள் முழுக்க இருப்பதை என் அனுபவமே எனக்குச் சொல்ல்கிறது.

தீவிரம் நிறைந்த ஒரு கட்டுரை நம்மை செயல்படத் தூண்டுகிறது. மஹாஸ்வேதா  தேவியின் ஒரு நேர்காணலில் அவர் தன் அனுபவங்களைச் சொல்லிய விதம் இன்று வரை எனக்கு ஒரு புதிய பாதை காட்டும் தீபமாக இருக்கிறது. படிக்கிற அனுபவங்கள் பற்றி படிப்பதே ஒரு சுவையான அனுபவம்தான். படித்த விசயங்களை மற்றவர்களிடம் பகிர்வது மற்றொரு அறிய அனுபவமாக இருக்கிறது.   

வெள்ளமும் வேதனையும்

இன்றைய ஹிந்து படிக்கையில் ஆந்திரம்,கர்நாடக மாநிலங்களில் மழை வெள்ளம் வந்து அதனால் அங்கு மக்கள் படும் துரம் பற்றி செய்திகள், படங்கள் வெளி வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த நிலை ஏற்பட்டுக் கொண்டே இருந்தாலும் ஒரு சரியான தீர்வு இதுவரை காணப்படவில்லை.

வானில்  பறந்து வெள்ளப் பாதிப்புக்களை பார்வையிடும் பிரமுகர்கள் பற்றியும் ஒவ்வொரு முறையும் அதே பத்திரிக்கைகளில் செய்திகளும், படங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தனது சின்னஞ்சிறு குடிசை மழை நீரில் மூழ்கி விட்ட சோகம் நெஞ்சைத் தாக்கி உலுக்க கண்ணீர் வடிக்கும் ஏழைப்பெண் ஒருத்தியின் படம் நம் மனதில் இடி போல இறங்குவதை உணர்கிறோம். என்னதான் தீர்வு? 

Sunday, October 4, 2009

கவிதையும் வாழ்வனுபவமும்..

இன்றைய ஹிந்து-ல் கவனகர் கனிமொழியின் நேர்காணல் வந்திருக்கிறது. தனது கவி உலகம் பற்றி அவர் சொல்லியிருக்கும் அனுபவப் பதிவுகள் முக்கியமானவை. கவிதை என்பது தன் சுயம் உடனான தொடர்ச்சியான உரையாடல் என்கிறார் கனிமொழி. அது என்னைக் கண்டறியும் ஒரு நிகழ்வு என்பது அவரின் பதிவு.

"எனக்குள் மௌனம், அதைக் காண்பது; அதன் மய்யத்தில் நான்  இருப்பது ஒரு அனுபவம். எவ்வளவு அலைச்சல்களுக்கு நடுவிலும் எழுத முடியும். சில் நேரங்களில் உங்களால் அந்தஉலகத்தைக் கண்டு அறிய முடியாமல் போகக் கூடும்".

"சில நேரங்களில் வேறு ஒரு வடிவத்தின் மூலம் அதைக் கண்டறியலாம். அது இசையாக, ஒரு திரைப்படமாக, படிக்கக் கிடைக்கிற ஒரு புத்தகம் இப்படி ஏதேனும் ஒன்றாக அது இருக்கலாம்."

இப்படி கனிமொழியின் கவிதை வாழ்வனுபவம் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு பல கவிஞர்களும் இந்த அனுபவத்தைக் கூறி இருக்கிறார்கள். உள்ள உணர்வுகள் வெளிப்படும் தருணம் எப்போது எப்படி அமையும் என்று யார் சொல்ல முடியும்?      

கல்வி உலகம்

இன்றைய ஹிந்து இலக்கிய விமர்சன இணைப்பில் மூன்று கட்டுரைகள் வாசிக்கையில் மிகவும் யோசிக்க வைத்தன. சமீபத்தில் உயர்த்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் பற்றி ஒரு கல்லூரி ஆசிரியர் எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று. வெறும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்க நேர்ந்த போது அதை நம்ப முடியாத ஒரே அதிசயமாக எதிர் கொண்ட ஒரு இளம் கல்லூரி ஆசிரியர், இருபது வருடங்களில் நாற்பது ஆயிரமும் அதற்கு மேலும் சம்பளம் பெரும் வாய்ப்புக் கிடைத்த போது அதை எதிர் கொள்ளும் விதம் இககட்டுரையில் பதிவாகி இருக்கிறது.

மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்று விரும்பி அதற்கு பாடுபடும் போது, மாணவர்களே அதை விரும்பாத நிலை இருப்பதாக அவர் கூறுகிறார். கல்லூரி நிர்வாகமும் சக ஆசிரியர்களும் கூட இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை என்கிறார். கடமை உணர்வும், சேவை செய்யும் மனமும் உடைய ஆசிரியர்கள் இப்படி மனச் சோர்வு அடையும் நிலை இருப்பது யார் கவனத்தில் பட வேண்டுமோ அவர்கள் கவனத்தை ஈர்க்குமா?

Friday, October 2, 2009

ஆ.சு வின் கவி உலகம்..

ஆ.சுப்ரமணியன் ஆசு என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். துவரை இவரின் ஆறு தொகுப்புகள் வந்து இருக்கின்றன.
ஆறாவது பூதம்,  அன்றொரு மௌனம், ஈரவாடை, குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன் ஆகியவை ஏற்கனவே வந்தவை. இப்போது 'நேசித்தவனின் வாழ்வுரை' வந்திருக்கிறது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. த.அறிவழகன் இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதி இருக்கிறார். அவர் வார்த்தைகளில்:

"வாழ்வின் சிக்கல்கள் எதிர்பாராத நெருக்கடிகளாகிற போது ஓரளவிற்கு எழுதி வந்த பலரும், தங்கள் அடையாளங்களை மீட்டு எடுக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போயிருக்கின்றனர். வெகுசிலரே நெருக்கடிகளையும் படைப்புகள் ஆக்கி மகிழும் சாமர்த்தியம் கைவரப் பெற்றவர்கள் ஆகமாறுகின்றனர். அவ்வகையில் தமிழ்க் கவிதைச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் ஆகவும் வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் சாமர்த்தியமாக இயங்குபவர் ஆகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார் கவிஞர் ஆசு".

கவிஞரின் எண்ணங்கள் ஓடும் திசை பற்றி அவரே சொல்கிறார்: "மொழியின் சாதுர்யத்திற்குள் குரலையும் கருதுக்களையும் ஒளிக்காமல், அதன் தேவைக்கு ஏற்ப கவிதையினை முன் நகர்த்த வேண்டிய பயன்பாட்டுக் கருவியாகவும் படைப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தையும் கவனத்தில் கொள்கிறேன்."   

ஆசுவின் இந்தக்குரல் முக்கியமான ஒன்று. "சின்னஞ்சிறிய குருவி நான், என் கூட்டை அழகாகக் கட்டிக் கொள்வேன்; யாவரின் துயரும் எனக்கானதாய் அகற்றுவேன். புன்னகைகளால் பூமி முழுவதும் நிறைப்பேன், மழை பகிர்ந்து காடுகளை விதைப்பேன்" என்கிறார் ஆசு.

"நிரம்பி வழியும் ஒவ்வொரு வின்மீணிலும் கடவுளின் கண்களில் ஒழி யுமில்கின்றன, ஒரே அன்பின் நீர்மை அந்த விண்மீனில் வழிவதை உணர்கிறேன்". இவ்வாறு ஆசுவின் கவி உலகம் விரிந்து கொண்டே போகிறது. நம் நெஞ்சில் இடம் பெறுகிறது.

Thursday, October 1, 2009

இன்னும் சில சிந்தனைகள்

கடைசியாக  என் சிந்தனைகளில் மீனாக்ஷி முகர்ஜியின் மறைவு மற்றும் நரேன் என்ற சமூக சேவகர் பற்றிய கட்டுரைகள் குறித்து எழுதி இருந்தேன். கடந்த சில நாட்களாக ப்ளாக்-இல பதிவு எதுவும் செய்ய முடியாமல் ஆகி விட்டது.  நேற்றும் இன்றும் படித்த சில விஷயங்கள் பற்றி இன்று பார்க்கலாம். கூகி வா தியன்கூவின் 'இடையில் ஓடும் நதி' நாவல் படித்தேன். தமிழில் இரா. நடராசன் மொழி பெயர்த்து இருக்கிறார். மிக அருமையான நாவல் இது. ஆப்பிரிக்க நாட்டு இலக்கியங்கள் இப்போது நிறைய தமிழில் வருகின்றன. இந்த நாவலின் களம் மிக வித்தியாசமானது. ஆப்பிரிக்க மக்களின் மரபு ரீதியான சடங்குகள் - வழிபாட்டு  முறைகள் பற்றியும், அவர்கள் நடுவே கல்வியின் விதைகள் விழுந்த பிறகு புதிய மனிதர்கள் உருவாகி வரும் விதம் பற்றியும் இது பேசுகிறது. அந்த மக்களின் ஆன்ம பலம் வெள்ளைக்கார மனிதர்களை எதிர் கொண்ட விதம் பற்றி நெஞ்சம் நெகிழும் வகையில் பதிவு செய்துள்ளது.  

கு.சின்னப்ப பாரதியின் சுரங்கம் நாவல்படிதேன்.அவரின் முந்தைய நாவல்கள் போலவே இதுவும் வர்க்கப் பார்வை கொண்ட நாவல்தான். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.  Indian literature இதழில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளன. மிக முக்கியமான கோணங்களில் அலசி ஆராய்கிற கட்டுரைகள் இவை. மதம், மொழி இனம் கடந்து அன்று இந்திய மக்கள் போராடிய விதமும் அவர்கள் பட்ட துயரங்களும்  நம் நெஞ்சங்களில் இருந்து மறைந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது.