Tuesday, April 20, 2010

களப்பணியாளர்களும் அங்கீகாரமும்..........!

அங்கன்வாடி என்கிற ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களில் பணியாற்றுகின்ற களப் பணியாளர்களின் பணிகள் நடுவே நடைபெறும் புத்தாக்கப் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,தொடர்ந்து சில தினங்களாக அவர்கள் நடுவே பேசியசந்தர்ப்பத்தில் சில உண்மைகளை அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒப்பீடு அளவில் குறைந்த சம்பளம்;இன்னும் அரசு ஊழியர் என்ற நிரந்தரத் தகுதி பெறாத நிலை;நீண்ட காலமாகக் கோரி வரும் சில சலுகைகள் கிடைக்காத ஏமாற்றம்;இவ்வளவு இருந்தும் தம் பொறுப்பில் இருபத்தைந்து குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டிருகின்றனர் என்பதில் அவர்களுக்கே உரித்தான பெருமிதம்;சமூகம் அங்கீகரிக்க விட்டாலும் தம்மிடம் வளரும் குழந்தைகள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் தம்மை மதித்து வந்து எங்கே கண்டாலும் பேசு கிரார்கள்; என்கிற ஒரு நிறைவை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.அதுதான் அவர்களை இயக்கம் உயிராற்றல்.அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஈடுபாடு ஏற்பட வேண்டும் என்பது பயிற்சியின் நோக்கம்.நாம் வாசிப்பு,பாடல்கள்,கதைகள்,பல்வேறு பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து சில எடுத்க்காட்டுக்கள் என்று அந்த ஈடுபாட்டை ஏற்படுத்தமுயல்கிறோம். அது நிறைவேறவும் செய்கிறது.அதை அவர்களின் முகப் பிரகாசத்திலும்,கண்களின் ஒளியிலும் ஓரளவு பேச்சிலும் நம்மால் உணர முடிகிறது.ஆனால், இந்த மாதிரிக் களப் பணியாளர்களுக்கு என்று,எப்படி,யார் அங்கீகாரம் வழங்கப்போகிறார்கள்?இந்தக் கேள்விதான் கடந்த ஒரு வருடமாகவே என் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது.அறிவொளி இயக்கம் என்கிற எழுத்தறிவுத் திட்டத்தில் வயது வந்தோர் கல்விப் பணியில் இருபது ஆண்டுகள் இடைவெளியே இல்லாமல் பணியாற்றிய அனுபவம்,பட்டறிவு மட்டுமே இப்போது மீந்திருக்கிறது.இந்தப் பணிகளின் வெற்றி,தோல்விகள் ஒரு புறமிருக்க,இப்படி பணி செய்திருக்கிறார்கள் என்பதையாவது இந்தச் சமூகம் தன மனதில் பதிவு செய்திருக்கிறதா?இது மில்லியன் டாலர் கேள்வி.இந்தக் கேள்வியை மனதில் சுமந்து கொண்டேதான் எங்களை போலவே களப்பணி செய்யும் அங்கன்வாடிப்  பணியாளர்களை உற்சாகப் படுத்தும் பயிற்சியை நடத்த நாங்கள் போகிறோம்.நல்ல நகைமுரண்தான் இது!

Sunday, April 18, 2010

அறிவியல் கட்டுரைகள் உலகப் பொதுவானவை...!

அறிவியல் உலகம் இன்று விரிவும் ஆழமும் பெற்று வருகிற காலம்.புதிய புதிய ஆராய்சிகள் நடைபெறுகின்றன.புதிய முடிவுகளுக்கு விஞ்ஞானிகள் தம் ஆய்வின் முடிவில் செல்கின்றனர்.அந்த ஆய்வின் முடிவுகள் உலகம் முழுவதும் உள்ள சக விஞ்ஞானிகளின் கவனத்திற்குப் போக வேண்டும் என்று விரும்புகின்றனர்.வெளிநாட்டு அறிவியல் இதழ்கள் எதிலாவது அந்த ஆய்வின் முடிவுகள் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.ஆனால் அம்மாத்ரி இதழ்களின் சந்தா மிகவும் அதிகம்.தனி நபர்களால் அந்த இதழ்களை வாங்க முடியாது.பெரும்நிருவனங்கள் கூட வாங்க முடியாத நிலை. இந்த நிலை பற்றி முது.மதன் எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.திறந்த வெளி அணுகுமுறையின் மூலம் நாமே அம்மாதிரியான இதழ்கள் நடத்தவும்,அவற்றில் நம் ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிடும் வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் முத்து.மதன்.இந்தியா போன்ற நாடுகளின் ஆராய்சியாலர்களுக்கு வேறு என்ன மாற்று?

Sunday, April 11, 2010

எழுதும்வேளைகளில் நம் மன உலகம்....

எழுதும்வேளைகளில் நம் மன உலகம்.......மார்ச் மாதம் பதிவுக்குப் பின் வேறு ஒரு பதிவும் செய்ய முடியாமல் வெளியில் அலைந்து கொண்டிருந்தேன்.இன்று படித்த சில வாக்கியங்கள் இப்படி உட்கார வைத்தன."உங்கள் எழுத்தின் ஊடே நீங்கள் மூச்சு விட்டுக்கொள்ள தவறினால்,உங்கள் எழுத்தில் நீங்கள் கதறிக் குரல் எழுப்பவில்லை என்றால்,உங்கல் எழுத்தின்  இடையே நீங்கள் பாடவில்லை என்றால் பிறகு நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்கள்.நமது கலாச்சாரத்திற்கு உங்கள் எழுதினால் ஒரு பயனும் கிடையாது...!"      மிக ஆழமான சிந்தனைகளை எழுப்பும் கருத்து இது.ஒவ்வொரு எழுத்தாளனும் தன அனுபவத்தில் உணர்கிற ஒன்றினை இந்த வரிகள் சொல்லுகின்றன.நாம் உணர்கிரவற்றை உணர்ந்தபடி முழுமையாகக் கொண்டு வர முடியாவிட்டாலும்,பெரும் அளவுக்கு படிக்கிறவர்கள் உணரும் வகையில் பதிவு செய்ய வேண்டும் என்றால் எழுதும் ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் கதறிக் குரல் எழுப்பித்தான் ஆக வேண்டும்.ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் நம் ஆத்மா இசைக்கும் பாடல் ஒன்றின் சாயலையாகிலும் கோடிட்டுக் காட்டி இருக்கவேண்டும்.வெளியில் வரத் தவித்துக் கொண்டு அலை மோதும் மூச்சு நம் e ழுத்தில் சுதந்திர உணர்வுடன் பீரிட்டு வந்திருக்க வேண்டும்.இப்படி உணர்ந்து எழுதினால் எழுத்தின் ஜீவனை வாசிப்பவர்கள் நன்றாக உணர முடியும்.இது நம் ஆசை.நிறைவேற வேண்டும் அல்லவா?