Saturday, January 16, 2010

சிவகுமாரும் சூர்யாவும்..........

இன்று திரைக்கலைஞர் சிவகுமார் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.நானும் துணைவியாரும் சென்று அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.ஒரு மணி நேரம் போனது தெரியாமல் ஓடி விட்டது.கம்பன் என் காதலன் என்ற தலைப்பில் அவர் நிகழ்த்தும் உரைகள் இப்போது குறுந்தகடு வடிவில் வந்துள்ளன.மனைவி,தாய் என்ற பாத்திரங்களை வகிக்கிற பெண்களை இந்த சமூகம் எப்படி மதிக்கிறது,எப்படி அணுக வேண்டும் என்று தன வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பேசுகிறார் சிவகுமார்.அந்தக் குறுந்தகடை முந்தைய சந்திப்பில் தந்தார். அதை நாஞ்சில் சம்பத்,சூர்யாவின் தமிழ் ஆசிரியர் மற்றும் நான்,சிவகுமார் ஆகியோர் அவரின் அலுவலகத்தில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது.ஒவ்வொரு மனிதனும் தன மனைவியின் பங்களிப்பு என்ன என்று மனப்பூர்வமாக உணர்வதற்கு அவரின் அனுபவப் பிழிவு உதவும்.இன்றைய உரையாடலின்மையமாக இந்தக் கருத்தே அமைந்தது.நாங்கள் விடைபெறும் வேளையில் சூர்யாவின் அனுபவப்பதிவான "இப்படிக்கு சூர்யா"என்ற புத்தகத்தைத் தந்தார்,திரு சிவகுமார்.வீடு வருமுன் இருபத்தைந்து பக்கங்கள் வரை படிக்க முடிந்தது.இன்று மிகப்பெரும் வெற்றிகளை திரையுலகில் அடைந்து விட்ட சூர்யா,தன சிறு வயதில் எந்த அளவுக்குத் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார் என்று படிக்கும் வேளையில் அது நம்பவே முடியாத ஒரு செய்தியாகவே இருக்கிறது.அனால் அவரே சொல்லும் செய்திகளை நம்பாமல் இருக்க முடியாது அல்லவா?சூர்யாவின் உணர்வுகளை எழுத்து வடிவில் தந்தவர் ஆர்.சி.ஜெயந்தன்.கல்கி இதழில் தொடராக வந்த சமயம்,ஓரிரு பகுதிகளைப் படித்து இருந்தாலும் இப்போது நூல் வடிவில் படிக்கும் போதுதான் அதன் வலிமை புரிகிறது.மிக வித்தியாசமான பதிவு.சிவகுமாரின் புதல்வர் அல்லவா?நூல் முழுவதும் படித்த பின் இன்னும் நிறையப் பதிவுகலைத்  தரக்கூடிய நூல்தான் இது.

1 comment:

  1. அருமைத் தோழர்.கமலாலயன்!
    வனக்கம்.
    இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கிறேன்.
    மிக்க சந்தோஷம். இனி தொடர்ந்து வருவேன்.

    மாதவராஜ்

    ReplyDelete