Friday, September 30, 2011

அண்மைக்கால நாவல்கள்

 தமிழ் நாவலுக்கு நூறு வயதுக்கு மேல் ஆகி விட்ட பின்பும்,இன்னமும் தமிழில் நாவல் என்று ஒன்று அதன் உண்மையான அர்த்தத்தில் வரவில்லை என்று சாதிப்போர் உள்ளனர்.இந்த மாதிரியான அபிப்ராயங்கள் ஒரு புறம் இருந்த போதும் இதுவரை இல்லாத வகையில் புதிய வடிவங்கள்,புதிய வண்ணங்கள் கொண்டு பல நாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.வாசிப்பு அனுபவத்தில் மட்டும் இன்றி அதன் பாடுபொருள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திலும் இவை வலிமை மிகுந்தவையே.சமீப கால நாவல்களின் விகசிப்பு மலைப்பை உண்டாக்குவது.பக்காளவு என்று பார்த்தாலும் மிக பிரம்மாண்டமான அளவில் உள்ளன.ஆயிரம் பக்க நாவல் என்பது சர்வ சாதாரணம். விரிந்த ஒரு கான்வாஸில் மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை இந்த நாவல்கள் உயிரோவியமாகத் தீட்டுகின்றன.மொழி,சொல்,பொருள் எல்லாம் புதிது.எழுதக்கூடாதவை என்று பலகாலம் விலக்கப்பட்ட பாடுபொருள்கள் இவற்றில் மிக இயல்பாக இடம் பெறுகின்றன.இன்னொரு விசேசம் வரலாற்றின் பக்கங்களில் இதுவரை இடம்பெறாத விளிம்புநிலை மாந்தர்கள் இவற்றில் இடம்பெறுவது.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை,அவற்றின் போராட்டங்கள்,உணர்சிக் கொந்தளிப்புகள்,அவர்கள் அடைந்த அவமானங்கள்,வெற்றிகள்,தோல்விகள்,பட்ட பாடுகள் எல்லாம் இடம்பெறுகின்ற விதம் புதியது.போரும்,அமைதியும் வெறும் செய்திகள் என்ற நிலை மாறி அவை இந்த விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வை எப்படிஎல்லாம் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்குகின்றன என்ற விசயத்தைப் பேசுகின்றன."அமைதி திரும்பிவிட்ட" போர்ப்  பிரதேசங்களில்இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை லட்சணங்கள் என்னவாக இருந்தன,இருக்கின்றன என்று உரக்கப் பேசுகின்றன.வாசிக்கவே மிகுந்த மனோதிடம் தேவைப்படும் விதத்தில் இவற்றின் விவரணங்கள் இருக்கின்றன.இவற்றில் சில நாவல்களை வாசித்த அனுபவம் இங்கு பதிவு செய்வதற்குரியது... 

No comments:

Post a Comment