Friday, March 22, 2013

மணிமேகலை ஏந்திய தீபம்

மணிமேகலை என்ற தமிழ்க்காப்பியம் என்னை மிகவும் கவர்ந்த மரபு இலக்கியங்களில் ஒன்று.சிலம்பின் வழி அதன் தொடர்ச்சியாகவும் சககவிஞன் ஒருவரின் படைப்பாகவும் அமைந்த காவியம் இது.இரட்டைக் காப்பியங்கள் என்று புகழ் பெற்ற இலக்கியங்கள் இந்த இரண்டும்.மாதவி என்ற ஒரு தனிச் சிறப்பு மிக்க பெண்ணின் மகளாகப் பிறந்து மணிபல்லவத் தீவில் தன முற்பிறவி பற்றி அறிகிறாள். இளவரசன் உதயகுமாரன் தன மீது கொண்ட காதலை ஏற்க மறுத்துத் துறவறம் பூண முடிவு செய்கிறாள். அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சமணமும்,பௌத்தமும் மிகுந்த செல்வாக்குடன் இருந்ததால் அந்தத் தத்துவ அடிப்படையில் பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி தீர்க்க அமுதசுரபி ஏந்துகிறாள்.கொலைப்பழிக்கு ஆளாகி சிறைவாசம் செய்ய நேர்கிறது. எந்த இடையூரையும் பொருட்படுத்தாமல் தன இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு போய் க் கொண்டிருப்பாள் மணிமேகலை.நேற்று ஒரு அறிக்கையின் மீது என் கவனத்தை நண்பர் ஒருவர் ஈர்த்தார்.இந்தியாவின் விவசாயிகள் மக்கள் தொகையில் சுமாராக ஐம்பது சதம்பேர் இருக்கலாம் என்றும் அவர்களுக்கு ஜீவாதாரமாக விவசாயம் இருந்தாலும் அதன் இன்றைய உற்பத்தித் திறன் மிகக்குறைவு என்பதால் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்பது போலவும் கருத்து வெளிப்பட்டிருந்தது.இன்று பிரதமரும் ப.சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளும் சொல்லுவது இதைதான்.இவ்வளவு பெரிய விவசாய நாட்டில் மிகப் பிரமாண்டமான மனித ஆற்றலும் எண்ணற்ற இயற்கை வளங்களும் வற்றாத கங்கை,பிரம்மபுத்திரா போன்ற ஜீவ   நதிகளும்        நிறைந்த நாட்டில் இப்படி ஓர் அவல நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.உலக மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் அந்த மக்களைப் பார்த்து விவசாயத்தில் நஷ்டம் வந்தால் அதை விட்டு விட்டு வேறு தொழில் செய்யப் போக வேண்டியதுதானே என்று இந்த நாடு சொல்கிறது.இன்று இந்த இருளின் நடுவே மனிமேகளை போன்று ஓர் இலட்சிய தீபம் ஏந்திய கைகள் எங்கே?ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னும் ஒரு விடியல் வரும் என்கிறார்களே அது உண்மையா?என்று வரும் அந்த விடியல்?

No comments:

Post a Comment