Monday, December 30, 2013

அகக் கடலில் அலைமோதும் எண்ணங்கள்

முக நூலில் போன மாதம் முகங் காட்டினேன்.அதன் பிறகு கடந்த சில நாட்களில் அதில் பல புதிய நண்பர்களின் அறிமுகம் தொடர்கிறது.சற்று முன்  ஜீவசுந்தரி அவர்கள் கொடுத்த குறிப்பைப் பார்த்தேன். எந்த ஊரில் நான் வளர்ந்தேன் என்று ஒரு கேள்வியும் இருந்தது.திண்டுக் கல் என்ற ஊரில் பிறந்து வளர்ந்த நான் படித்து அங்கு டெக்னிக்கல் ட்ரைனிங் படித்தேன். சென்னை,வேலூரில் வாழ்க்கை.பின் மீண்டும் சென்னை.இங்கு கடந்த இருபது ஆண்டுகளாக ஓடும் வாழ்க்கை நதி.எழுத்தும் படிப்பும் இரு கண்களாய் இருக்கின்றன.1970 ம் ஆண்டு என் முதல் சிறுகதை மத்தாப்பு இதழில் வந்தது.பின் தொடர்ந்து கல்கி,குங்குமம், தீபம் செம்மலர்,சிகரம்,தினமணி கதிர் சுபமங்களா குமுதம் தீராநதி புதிய புத்தகம் பேசுது என்று பல இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் மொசிபெயர்ப்புகளும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.என் முதல் சிறுகதைத் தொகுப்பை மறைந்த "அன்னம்' மீரா அவர்கள் வெளியிட்டார்.பாத்து ஆண்டு இடைவெளிக்குப் பின் "நம் எல்லாரிடத்திலும் ஒரு சிற்பி கட்டுரைத்தொகுப்பை ஸ்ரீநிவாசன் வெளியிட்டார். தொடர்ந்து பன்னிரண்டு புத்தகங்கள் வந்து விட்டன. உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வரலாற்று நூலும் மிச்சம் மீதி என்று ஒரு வித்தியாசமான வரலாற்று நூலும் வந்துள்ளன. கடைசியாக வந்திருப்பது ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூல்.எழுத்துக் கலை என்ற ஜீவ நதியின்கரை ஓரம் நின்று நீர் அள்ள முயலும் தாகம் நிறைந்த ஒரு மனிதன் என்பதற்கு மேல் இப்போது வேறு என்ன எழுத?    

No comments:

Post a Comment