Sunday, December 28, 2014

மாதொரு பாகன் நாவலும் பண்பாட்டுக் காவலர்களும்

பெருமாள் முருகன் எழுதிய ஒரு நாவல்,"மாதொரு பாகன்" என்பது.அந்த நாவல் வந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டன.இப்போது அந்த நாவல் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு காலச் சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.அதில் ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு ஊரில் உள்ள இறைவன் மாதேஸ்வரனை இழிவு படுத்தியும்,குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பண்பாடு குறித்து தவறான சித்தரிப்புகளைச் செய்தும் பெருமாள் முருகன் எழுதி இருப்பதாக ஹிந்துத்வா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.நூலின் ஆசிரியர்,  பதிப்பாளர் கண்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் இப்போது குரல் எழுப்பி இருக்கிறார்கள்.இவ்வளவு நாட்கள் கழித்து இந்தப் பிரச்னை முன்னுக்கு வந்திருப்பது மிக ஆச்சரியம் அளிக்கிறது.திட்டமிட்டு இப்படி கலைஞ்ர்களையும் ஓவியர்களையும்,படைப்பாளிகளையும் ஹிந்துத்வ அமைப்புகள் குறி வைத்துத் தாக்குவது சமீப நாட்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது.இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ச.தமிழ்ச்செல்வனும் அர்ஜுன் சம்பத்தும் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள்.நூலை படித்தீர்களா என்று தமிழ் கேட்ட போது  படிக்கவில்லை என்கிறார் அர்ஜுன் சம்பத்.ஒரு புத்தகத்தைப் படிக்காமல் அது தடை செய்யப்பட வேண்டிய நாவல் என்று சொல்லுகிற இவர்களை என்னவென்று சொல்லுவது? இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்ப் படைப்புலகம் ஒன்று திரள வேண்டும்,ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்.பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகள் இந்த விஷயம் பற்றி  எதிர்வினை ஆற்றப் போகிறார்கள்?   

No comments:

Post a Comment