Sunday, September 20, 2009

என்னை பற்றி..

கமலாலயன்

அப்பா: நாராயணசாமி வேலுசாமி
அம்மா: தாயாரம்மாள்
மனைவி: ஜெயந்தி
மகன்: பிரசன்னகுமார்
மகள்: பிரதிபா

பிறந்து வளர்ந்தது திண்டுக்கல். படிப்பு Tool and die டிசைன்.
1989 வரை அத்துறையில் பணி  செய்த பிறகு, 1990 முதல் இன்று வரை எழுத்தறிவுப் பணி (அறிவொளி இயக்கம், திருவள்ளூர் மாவட்டம்).
 
என் படைப்புகளில் நூல் வடிவம் பெற்றவை:
1.பார்வைகள் மாறும் - அன்னம் வெளியீடு. சிறு கதை தொகுப்பு.
2.நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி - மொழியாக்கக் கட்டுரைகள்
3.நூலகங்களுக்குள் ஒரு பயணம் - பாரதி புத்தகாலயம் 
4. மார்க்சியமும் கலாச்சாரமும் 
5.சிகரம் சிற்றிதழ் தொகுப்பு
6.புவி முழுமைக்குமான நீதி - சேகுவேராவின் Global Justice- மொழிபெயர்ப்பு - பாரதி புத்தகாலயம்
7.மனிதர்கள் விழிப்படையும் போது.. Athivasis Revolt மொழிபெயர்ப்பு- கோதாவரி பருலேகர்-சவுத் விஷன்
8.மானுட வீதி - கவிஞர் யுக பாரதியின் இயற்கை வெளியீடு.
பிறகு பல்வேறு தொகுப்பு நூல்களில் கட்டுரைகள் நிறைய பிரசுரமாகி உள்ளன. தொடர்ந்து புத்தக அறிமுக கட்டுரைகள்  பல பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டு இருக்கின்றன.
தீபம், கணையாழி,உயிர்மை,தீரா நதி,கல்கி,குங்குமம்,தாமரை,செம்மலர்,புத்தகம் பேசுது..போன்ற பல இதழ்களில் எழுதி வருகிறேன்.

No comments:

Post a Comment