Thursday, March 18, 2010

படைப்புகளின் பின் உறைகிற வலிகள்

படைப்புகளின்  பின்  உறைகிற  வலிகள் பற்றிப் பேச முற்படும் பொது வாசகனின் மனநிலைகள் பலவிதமானவை.கண்காணாத இடங்களில் கரும்புத் தோட்டங்களில் உழைத்து வாடும் கூலிகள் பற்றிப் பாடுகிற பாரதி நம் முன்னோடி.தேயிலைத் தோட்டங்களில் பிழைப்புத் தேடித் போன மனிதர்களின் சோகங்கள் "எரியும் பனிக்காடு"நாவலில் ரத்தமும் சதையுமாய் இடம் பெற்றிருக்கின்றன.மொழிபெயர்த்த இரா.முருகவேளின் தமிழ்நடையில் முன் எப்போதோ கூலிகள் சிந்திய ரத்தவாடை அடிப்பதை படிக்கும் வாசகர் உணர முடியும்.பிஜித் தீவில் கூலிகள் ஆகப் பிழைக்கப் போன நம் தமிழ்ப்பெண்கள் சிந்தும் கண்ணீர் பாரதியை விம்மி விம்மி விம்மி விம்மி அழச் செய்தது.அந்தக் கவிதையின் தாக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் துயரப்படும் பெண்களின் காப்பாளர் ஆகத் தன்னைக் கற்பித்துக் கொள்ளும் சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி பற்றி மைதிலி சிவராமன் எழுத்து வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.                             ஆழி சூழ் உலகு நாவல் படிக்கும் ஒருவர் ஆழ்கடலில் கட்டுமரங்கலேறிச் சென்று மீன்கள் பிடிக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மீனவ மக்களின் துயரக் கடலில் மூழ்கிப் போவார்."அந்த தூரத்து மலைகளின் நடுவே யாரோ மெல்ல விசும்பி அழும் குரல் கேட்டு"'உங்கள் மனம் நடுங்கச் செய்வார் நா.பா.நோயால் துடிக்கும் கணவனின் பசிப்பிணியைத் தீர்க்கத் தன கற்பைப் பணயம் வைக்கும் மனைவி புதுமைப்பித்தனின் எழுதுகோலில் உயிரோவியமாய் எழுவாள்.                                                                                        "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம்,எம் குன்றும் உடையேம்;இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இல்லாமல்,எம் குன்றும் இல்லாமல் வாடி நிற்கிறோம்"என்று மனம் நோகும் பாரி மகளிரின் சோகம் நம்மணப் பரப்பில் கொண்டு வரும் வெண்ணிலா கண்ணீர் சிந்தி வருவதை அறிவது சிரமமாய் இருக்காது.இப்படிப் படைப்புகளின் பின்னால் உறைந்து கிடக்கிற வலிகள் எண்ணற்றவை.எழுதும் படைப்பாளிகளின் உயிரைத் தின்று வடிவம் கொள்கிரவை.           "என் உயிரைக்கொட்டி நான் இசைத்த பாடல் உனக்குக் கேட்காமல் போனது எப்படி?" என்று வியக்கிறது ஜூலிஸ் புசிக்கின் மனம்..........இந்த "நிலம் மறுகும் நாடோடிகளின்" துரப்பாடல்களை இசைக்கும் "கண் தெரியாத இசைஞ்ன்" யார் கண்ணிலும் படாமலே மறைந்து போவதை எப்படி எழுதுவது?...........................!

No comments:

Post a Comment