Sunday, June 6, 2010

வாசித்தலின் எல்லைகள்..

எனது சிந்தனைகளைப் பதிவு செய்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது.அன்றாட வேலைகள்;அலைச்சலும் உளைச்சலும் மிக்க வாழ்க்கை;எண்ணங்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நடைமுறை அலுவல்கள்;இப்படியாக நாட்கள் ஓடிவிட்டன.இன்று சிறிது அவகாசம் கிடைத்தது.கடந்த சில நாட்களில் புத்தகம் பேசுது இதழின் நூறு இதழ்களையும் படித்து அது பற்றி எழுதும் ஒரு வேளையில் ஈடுபட நேர்ந்தது.தமிழில் புத்தகங்களுக்கு என்றே வருகிற பத்திரிகை இது ஒன்றுதான்.வாசிப்பு அனுபவம் என்ற ஒன்று விவரிப்புக்கு அப்பாற்பட்டது.சொல்ல முற்படும் போதே சொல்லில் அடங்காமல் நழுவும் அது,பாவண்ணன் அவர்கள் அயோத்திதாசப் பண்டிதர் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று முன்பு வந்திருந்தது,அதை இப்போது படிக்கையில் எல்லையற்ற சிந்தனைகளின் ஊற்றுக் கண்ணை அது குத்தித்  திறந்து விட்டாற்போல் இருந்தது,அது போன்றே மாதவராஜ் எழுதிய காற்றுகென்னஎல்லை என்ற கட்டுரைதொடரும் பலப்பல சிந்தனைகலைத் தூண்டியது. வாசிப்பின் எல்லைகள் தாண்டி புனைவின் வெளியில் பயணம் செய்ய உதவும் எழுத்துகள் இவை.விரிவாக இது பற்றி எழுதும் முனைப்புடன் சிறிது இடைவேளை.....!

No comments:

Post a Comment