Tuesday, May 10, 2011

vaasakan oruvan pesukiren

வாசகன் ஒருவன் பேசுகிறேன்,,,,,,,,,,இப்படி ஒரு குரல் என்னில் ஒலிக்கும் பொது அந்தக் குரல் எழுப்பும் நினைவு அலைகள் ஏராளம்.நல்ல படைப்புகளைப் படிக்கும் ஒவ்வொரு தருணமும் பொன்னானது.இன்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "வாசகபருவம்"படித்த சமயம் இந்தக் குரல் பெரும் முழக்கம் போல ஒலித்தது.பல முன்னோடி எழுத்தாளர்கள் பற்றிய தன வாசக அனுபவத்தைக் கலை நுணுக்கமும் படைப்பாளியின் ஆளுமையும் கலந்த ஒரு நடையில் எஸ்ரா எழுதி இருக்கிறார்,வைக்கம் முகம்மது பஷீர் கி.ராஜநாராயணன்,ப.சிங்காரம்,எ.கே.ராமானுஜன்,சி.சு.செல்லப்பா,அசோகமித்திரன்,பிரபஞ்சன்,கோணங்கி,வண்ண நிலவன்,இப்படி பெரும் ஆளுமைகள் பற்றி தனக்கே உரிய பாணியில் எஸ்ரா எழுதியிருக்கிறார்.படைப்பு மனநிலை என்பது மிக ஆழமானது.சக மனிதர்கள் படும் அவஸ்தைகள் ஒரு நுண்ணிய மனதில் உண்டாக்கும் தாக்கம் மிக வலியது.இந்தப் பதிவுகள் அந்தத் தாக்கம் முழுவதையும் நம் மனதில் எளிதில் கடத்திபோல் கொண்டு வந்து நிரப்புகின்றன..வலி மிகுந்த தருணங்கள் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான உத்வேகத்தைத் தருகின்றன.மீரா பற்றி அவர் எழுதி இருக்கும் பதிவு என் சொந்த அனுபவத்தில் பதிந்துள்ள மீரா நினைவுகள் போன்றே விரிந்து செல்கின்றன.என் முதல் தொகுப்பை "பார்வைகள் மாறும்"என்ற தலைப்பில் மீராதான் வெளியிட்டார்.அதன் அட்டைப்படத் தேர்வு கோணங்கியினுடையது.திருவண்ணாமலையில் கலை இரவின் பொது நிகழ்வில் வெளியிடப்பட்டது.மீரா தான் சுமந்து வந்த கட்டைப் பிரித்து முதல் பிரதியைத் தந்த அந்த நிமிடம் எந்த எழுத்தால் பதிவு செய்யப் படக் கூடும்?என்றும் மறையாத அந்த நிகழ்வும் அது போன்ற பல சமயங்களில் சிவகங்கையிலும் சேலம்,சென்னை உள்பட பல இடங்களிலும் மீராவுடன் பேசித் திரிந்த பொழுதுகளும் இன்று முழுக்க அலை புரண்டன.எஸ்ராவின் எழுத்து குறித்து இன்று மீளவும் பிரமிக்க நேர்ந்த தருணம் மலரின் விகசிப்புப் போன்று என் மனமெங்கும் வியாபித்திருக்கிறது.................!

No comments:

Post a Comment