Thursday, February 23, 2012

indrum innoru naalum....

இந்தப் பகுதியில் இடுகை என்று பதிவு செய்து நீண்ட காலம் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நமது மனப் பரப்பில் எண்ணற்ற சிந்தனைகள் இடம் பெற்று விடுகின்றன.அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயல்கிறோம் எல்லாவற்றையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவது இல்லை.சிலருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடிவதும் இல்லை.எழுத்து என்ற ஊடகம் நமக்குக் கை கொடுக்கிறது.இசை,ஓவியம்,நாடகம்,சினிமா,சின்னத் திரை என்று எத்தனையோ ஊடகங்களின்று. அசோகமித்திரன் எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு "வாழ்விலே ஒரு முறை"என்பது.பிறகு சில காலம் கழித்து "இன்னும் சில நாட்கள்' என்ற அடுத்த தொகுப்பு வந்தது.இன்றுடன் அல்லது வாழ்வில் ஒரு முறை என்று நினைக்கிறோம்.ஆனால் இன்னும் சில நாட்கள் இருக்கவே செய்கின்றன.நேற்று முடிந்து போய் விட்டது;இன்று முடியப் போகிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நாளை வரத்தான் போகிறது என்பது.எனது எழுத்துப் பணிகளில் சில சமயம் சோர்வு ஏற்படும் வேளைகளில் இந்த "வாழ்விலே ஒரு முறை"யும் "இன்னும் சில நாட்கள்" தலைப்புமே நினைவுக்கு வரும்.மீண்டும் எழுதுவேன்.வாழ்க்கை என்னும் மகா நதியில் மிதந்து கொண்டிருக்கிற சிறு படகு நான்.எழுதும் வாசிப்பும் எனது இரு கண்கள் எனலாம்.இவை இல்லாதிருந்திருந்தால் நான் என்னவாகி இருப்பேன்?நினைக்கவே துயரம் தரும் கேள்வி இது.சற்று முன் வாசித்த தோழர் தொழார் கவின்மலரின் பதிவு ஒன்று மறைந்த தோழர்   உ.ரா.வரதராஜன் அவர்கள் பற்றிய ஒரு கண்ணீர்ததும்பும் பதிவு மௌனமாக் நம்மை அழச் செய்கிறது.போரூர்ஏரியைக்  கடக்கும் போதெல்லாம் அவரின் துயர நினைவு வந்து நெஞ்சைக் கனமாக்கி  விடும்.இன்றைய அரசியல் வானில் இப்படி பல துயர நிகழ்வுகள்.அவற்றின் பின்னால் எந்த விதமான "தத்துவ"சண்டைகள் நிகழ்ந்தனவோ?ஆனால் இவற்றின் பின்னுள்ள அவல நிலை நம்மைத் திகைக்கச செய்கிறது.எனினும் நாம் நின்று விட முடிவதில்லை."இருள் என்னும் விருந்தாளி இரவு வரைக்கும் தான்;எவர் தடுத்து இதுவரை விடியல் நின்றிருக்கிறது?"என்று உருதுக் கவிஞர் சாகிர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது இன்னொரு நாள் இதோ நாளை வருகிறது.....நடக்கிறோம்,நடப்போம்.

No comments:

Post a Comment