மார்ச் மாத சண்டே இந்தியன் பத்திரிகையில் உதயசங்கரின் நேர்காணல் வந்துள்ளது.படைப்பாளியின் வெற்றி தோல்வி குறித்த அவரின் சிந்தனைகள் நன்கு வெளிப்பட்டுள்ள இந்த நேர்காணலில் மிக நுட்பமான சில விசயங்கள் இடம் பெற்றுள்ளன.முப்பது ஆண்டுகள்;எட்டு கதைத்தொகுதிகள்;ஐந்து கவிதைத் தொகுப்புகள்;குறுநாவல் தொகுப்பு ஒன்று;ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்கள் இப்படி உதயசங்கரின் பங்களிப்பு கணிசமானது.மானுடத்தின் இருண்ட பக்கங்களையும்,ஒளிவீசும் நம்பிக்கைகளையும் கலை இலக்கியத்தைத் தவிர வேறு எதனால் சொல்லி விட முடியும் என்று கேட்கிறார் உதயசங்கர்.இலக்கியத்தில் வெற்றி தோல்வி என்று சமகாலத்தில் கணிக்க முடியாது என்று கருதுகிறார் அவர்.அங்கீகாரம் பெரும் போது உற்சாகம் அடைவதுபோல அலட்சியப் படுத்தும் போது அதே தீவிரமான வலியுடன் அடுத்த படைப்பை நோக்கிப் பயணிக்கிறார் அவர்.கோவில்பட்டி என்ற சிறு நகரின் வெம்மையின்,பெருமூச்சின் அழுத்தம் உதயசங்கரின் படைப்புகளில் வெளிப்பட்டுத் தெரிகின்றன.இப்போது அவர் கதை வசனம் எழுதிய நினைவோடு கலந்து விடு திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.இந்த நேர்காணல் அவரின் இன்னொரு பரிணாமம் என்றால் மிகையில்லை.
No comments:
Post a Comment