Monday, March 11, 2013

குழந்தைகளும் நாமும்

குழந்தைகள் சார்ந்த சிந்தனைகள் நிறைந்த நூல்கள் சமீப காலமாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன.சமூகத்தின் கவனம் குழந்தைகளின் மீது கொஞ்சம் திரும்பி இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.இவற்றைப் படிப்பதன் பயன் என்ன   என்றால் நமது வீட்டுக் குழந்தைகளின் மீது நமது கவனம் இன்னும் சற்றுக் கூடுதலாகப் பதிவதுதான்.என் அனுபவத்தில் எங்கள் பேரனுடன் செலவழிக்கும் நேரம் எல்லாம் மிகப் புதிய அனுபவங்களைத் தந்து செல்கிற பொழுதுகளாக இருக்கின்றன.தோழர் உதயசங்கர் இளைஞர் முழக்கம் இதழில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் இந்த வகையில் பல ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டி விடுவதாக இருக்கிறது."குழந்தைகளின் அற்புதஉலகில் "என்ற தலைப்பில் அவர் கடந்த 24 மாதங்களாக எழுதிக் கொண்டு வருகிறார்.இந்த மாதக் கட்டுரை கல்வியின் அரசியல் பற்றிப் பேசுகிறது.இந்த அரசியல் நமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் பாதிப்பதாக இருக்கிறது. தங்களின் பள்ளி ஆசிரியருக்கு "எங்களை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க" என்று கேட்டு மாணவர்கள் எட்டுப் பேர் எழுதும் கடிதம் தான் அதே தலைப்பில் வந்துள்ள குறுநூல்.எழுத்தாளர் சாஜகான் தமிழில் கொண்டு வந்த இந்த நூலை மதுரை "வாசல்"பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.இந்தப் புத்தகம் பற்றிய தன சிந்தனைகளை எப்போதும்    போல  போல் உதயசங்கர் ஆழ்ந்த கேள்விகளை எழுப்பி முன்வைக்கிறார்."ஒருவகையில் இது தோற்றுப் போனவர்களின் முழக்கம்.தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி .கூட்டாகக் கற்பது அரசியல்,தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது"என்று நூலின் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கிறார் உதயசங்கர்.குழந்தைகளுடன் வாழ்வது என்பது எவ்வளவு மகத்தான விஷயம் என்று இப்போதுதான் புரிபடத் தொடங்குகிறது.....தொடர்ந்து யோசிப்போம்.     

2 comments:

  1. குழந்தைகள் உலகம் தனி உலகம்.

    ReplyDelete
  2. aam,vimalan.Nanri ungal pinnoottathirku.ungalaip patri ariyalaamaa?

    ReplyDelete