Wednesday, January 31, 2018

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இங்கு நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்,அதன் பிறகு இன்றுதான் மீண்டும் எழுதுகிறேன்.கடந்த பதினான்காம் நாளன்று மோசமான  ஒரு சாலை விபத்தில் வலது கால் எலும்பு முறிவுகளை அடைய நேர்ந்தது.இரண்டு அறுவைசிகிச்சைகளையடுத்து படுக்கையிலேயே கழிகிறது காலம். முடிந்தவரை படுத்துக்கொண்டே வாசிப்பது,யூடியூபில் எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்றோரின் சொற்பொழிவுகளைக் கேட்பது என நாட்கள் நகர்கின்றன.
          இந்த நாட்களில் நான் வாசித்த ஒரு முக்கியமான புத்தகம், இஸ்மத் சுக்தாயின் " வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை " என்பது. உருது இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற, சர்ச்சைக்குரிய ஓர்  எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் பல கதைகள் பெரும் எதிர்ப்பையும்,வழ்க்கு களையும் சம்பாதித்திருக்கின்றன, அவரின் சொந்த வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு போராட்டமாயிருந்து வந்திருக்கிறது என்று இப்புத்தகம் முலம் அறிய முடிகிறது.சதத் ஹசன் மாண்டோவைப் போலவே ஐவரும் கடைசிவரை உருது இலக்கியக் கலகக்காரியாகவே இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.     

No comments:

Post a Comment