Tuesday, February 8, 2011

படைப்பு நெறிகள்....பின்பற்ற வேண்டாமா?

படைப்புத் தொழில் மட்டும் இன்றி எந்த ஒரு பணிக்கும் சில நெறிகள் உண்டு.ஆனால் படைப்பாளிகளிடம் இந்த நெறிகளை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்.காரணம் உலகின் நெறிகெட்ட செயல்களை எல்லாம் சாடுகிரவர்கள் படைப்பாளிகள் என்பதுதான்.இன்று வாசிக்க நேர்ந்த ஒரு கட்டுரை,ஒரே ஒரு எழுத்துக் கூட மற்றம் இன்றி ஒரே நேரத்தில் இரண்டு இதழ்களில் வந்துள்ளது.எழுதியவர் ஒன்றும் சாதாரணமான ஊர் பெயர் தெரியாத எழுத்தாளரும் அல்ல.இன்று சமகாலத் தில் எழுத்தாளர்கள் நன்கு அறிந்த ஒருவர்.ந.முருகேச பாண்டியன் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதிய கட்டுரை அது.உயிர் எழுத்து பத்திரிகையிலும் புதிய புத்தகம் பேசுது வெளியிட்டுள்ள தமிழ் தொகுப்பு நூல் வரலாறு சிறப்பு மலரிலும் ஜனவரி இதழ்களில் அந்தக் கட்டுரை ஒரே சமயத்தில் வெளி வந்துள்ளது.இது எப்படி நேர்ந்திருக்கும்?ஒரு இதழுக்கு அனுப்பிய கட்டுரை வெளி வருகிறதா இல்லையா என்று காத்திருந்து பார்க்கும் பொறுமை இல்லை என்றால் முதலில் அனுப்பிய இதழுக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்து விட்டு வேறு இதழுக்கு அதே கட்டுரையை அனுப்பலாம்.அது எழுதியவரின் உரிமை.ஆனால் இப்படி இரண்டிலும் ஒரே கட்டுரை ஒரே நேரத்தில் வெளிவரும் வகையில் முருகேச பாண்டியன் செயல் அமைந்து இருப்பது வருத்தம் தரும்விதத்தில் இருக்கிறது.                                                            இது எந்த வகையில் படைப்பு நெறி சார்ந்த செயல் என்று எழுதியவர்தான் சொல்ல வேண்டும்.....!

No comments:

Post a Comment