Sunday, February 6, 2011

அன்பின் பகிர்தல்கள்........

பாண்டிச்சேரி போகும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.முனைவர் பரசுராமன் எழுதிய நான்கு புத்தகங்களை அறிமுகம் செய்து பேச வேண்டும் என்று தோழர் எஸ்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.நிகழ்வு நன்றாக அமைந்தது.அது ஒரு புறம்.பாண்டி எப்போதுமே என்னைக் கவர்ந்த ஒர் ஊர்.கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதுமே இயற்கையின் எழில் கொஞ்சும்.போக்குவரத்து நெரிசல்.விடுதிகள்,ஹோட்டல்கள்,வாகனங்கள்..இந்த இடையூறுகள் ஒரு புறம்.ஆனால் இதையெல்லாம் தாண்டி புதுவை சென்று விட்டால் அது ஒரு மகிழ்வூட்டும் அனுபவம்தான்.பாரதி,பாரதிதாசன்,அரவிந்தர்,வ.ரா.,வ.வே சு.அய்யர் இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களும்,விடுதலைப் போராட்ட வீரர்களும் கவிஞ்ர்களும்,வாழ்ந்த மண் அது.அங்கு நேற்று இரவு தங்கிய சமயம் நண்பரின் வாழ்க்கை பற்றி அறிய நேர்ந்தது.ஒரு சிக்கல்,அதில் இருந்து மீண்டு வர அவர் நடத்திய போராட்டம்,குடும்பத்தினரின் மன உளைச்சல்,தோழர்களின் ஆதரவு,இப்போது மீண்டு வந்த பின் சற்று அமைதியான நிலை,அடுத்தது என்ன என்ற கேள்வி..இப்படி நேரம் போவது தெரியாமல் பேசினோம்.ஒவ்வொரு மனிதரிடத்தும் ஒரு நல்ல நாவல் இருக்கிறது என்று சொல்வார்கள்.தஞ்சை மாவட்ட வாழ்வின் ஒரு பகுதி தி.ஜானகிராமன் நாவல்களில் பதிவு ஆகி இருக்கிறது.ஆனால் நண்பர் விவரித்த வாழ்க்கை முற்றிலும் வேறு விதமான உலகம்.அதை எழுதுங்கள் என்று சொன்ன சமயம் அவரும் அது பற்றி யோசித்தார்.செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.அன்பு நிறைந்த வாழ்க்கை இந்த சோதனைகளை எதிர் கொண்டு வெல்லும் என்று மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது........!

No comments:

Post a Comment