Monday, December 24, 2012

பயணங்கள் தொடரும்

இந்த ஆண்டின் நிறைவுப் பகுதியில் நாம் இருக்கிறோம். மனநிறைவு அளிக்கும் சூழலில் இருக்கிறோமா இந்தக் கேள்வி மனதில் பெரும் பாரமாய்ச் சுமை கூடுகிறது.நமது நாட்டின் தலை நகரில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்  ஒரு மனிதன் எப்படி மனநிறைவு கொள்ள முடியும்? இங்கு அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா? ஆம் என்றால் நமது குழந்தைகளின் எதிர்காலம் இங்கு பாதுகாப்புடன் இருக்குமா?மிகுந்த அவநம்பிக்கையோடும் கவலையோடும் யோசிக்கிறேன்.தலைநகர வீதிகளில்  இளம் மாணவர்களும் பணியாளர்களும் பல்லாயிரம் பேர் காவல் துறையினரால் மிருகத் தனமாகத் தாக்கப் பட்டுக் கொண்டுள்ளனர்.எப்போதும் போல சமூக விரோதிகள் இந்த நிகழ்வுகளில் தங்களின் கைவரிசைகளைக் காட்டி விட்டனர். இதுதான் சாக்கு என்று காவல்துறை தன வலிமை முழுவதையும் திரட்டி மக்களின் மீது பாய்ந்திருக்கிறது.யாருடைய குரலுக்கும்,ஆட்சேபனைகளுக்கும் அந்த இயந்திரம் ஒரு போதும் மதிப்பு அளித்ததே இல்லை.எனவே வீதிகள் போர்க்களம் போலாகி விட்டன.இந்த அளவுக்கு இதற்கு முன் போலிசை இப்படி மக்கள் இவ்வளவு பெரும் அளவில் எதிர்கொண்டிருப்பார்களா?சந்தேகம்தான்.இனி என்ன நடக்கும்?ஒரு விசாரணைக் குழு போடப்பட்டு விட்டது.பிரதமர் உறுதி அளித்து விட்டார்.ஓடும் பேருந்தில் ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட கொடும் செயலுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்குமாம்.மணிப்பூர் மக்களின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாகப் போராடும் இரோம் ஷர்மிளா கேட்டால் சிரிப்பார்.வேதனையுடந்தானே ஊடகங்களும் இன்று இதில் காட்டுகிற வேகத்தை விளிம்புநிலை மக்களின்பால் காட்டியதுண்டா?கேள்விகள்..கேள்விகள்...பதில்தான் கிடைப்பதே இல்லை...............

No comments:

Post a Comment