Monday, January 14, 2013

பொங்கல் புத்தாண்டு புத்தகக் கண்காட்சி

இன்று பொங்கல்.புத்தாண்டில் பதினான்கு நாட்கள் ஓடி விட்டன.ஒவ்வொரு புதிய ஆண்டின் போதும் மக்கள் புதிய நம்பிக்கைகளுடன் வாழ்வைத் தொடருகின்றனர்.அவை நிறைவேர்கின்றனவா என்பது வேறு விஷயம்.இன்று நாளை மறுநாள் என்று நம்பிக்கைகளின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே போகின்றன.என்றாவது ஒரு நாள் விடிவு வரும் என்று அவர்களின் பயணம் தொடர்கிறது.இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சி தொடக்கி விட்டது.முன்பு ஒரு போதும் இல்லாத அளவுக்கு ஸ்டால்கள்.லட்சக்கணக்கான புத்தகங்கள். கூட்டம் கூட்டமாக குடுபத்துடன் வந்து செல்லும் மனிதர்கள்.இதுபற்றிய ஒரு விவாதத்தில் பங்கு கொள்ளும் வாய்புக் கிடைத்தது.புதிய தலைமுறை தொலைக் காட்சியில் நானும் காந்தி கன்னதாசனம் சல்மா பாமரன் ஆகியோரும் பங்கு கொண்டோம்.புத்தகங்கள் இன்று  மக்கள் கவனம் செலுத்தும் ஒரு விசயமாக மாறி வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நல்ல நூல்வாசிப்புக்கு இணையான வேறு ஒன்று இல்லை என்பதை உணர்ந்து வருகிறார்கள் என்றே  என்றே தோன்றுகிறது.இந்த விழிப்புணர்வை இன்னும் விரிவாக்க வேண்டும் என்பது நம் முன்புள்ள கடமை.எழுதுகிறேன்,ஆகவே இருக்கிறேன் என்று உதயசங்கர் எழுதியிருக்கிறார்.படிக்கிறேன்,ஆகவே இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம்.படிப்பதால் நாம் வளர்கிறேன்.படிப்பது என் சக மனிதர்களைப் புரிய வைக்கிற வழியாகிறது.வாழ்க்கையாகிறது.நீரோடும் நதியின் கரையில் நின்று இரு கைகளாலும் வாரி வாரிக் குடித்துக் கொண்டிருப்பதும்.படிப்பதும் ஒன்றுதான்.படித்துத் தீரா நதியின் கரை அது.இந்தப் புத்தாண்டில் படிக்கவும்,எழுதவுமான விசயங்கள் மலையெனக் குவிந்து விட்டன.இந்த ஆண்டின் தொடக்கம் நம்பிக்கை அளிப்பதாகத் தான் இருக்கிறது.நம்புகிறேன் ஆகவே படிக்கிறேன் ஆகவே வாழ்கிறேன்

No comments:

Post a Comment