Thursday, January 27, 2011

ஆண்டன் சேகாவும் நூற்றி ஐம்பது ஆண்டுகளும்...

ரஷியாவின் மூலம் உலகம் பெற்ற நன்மைகள் என்ன என்ன என்று பார்த்தல் அவசியம்.குறிப்பாக இலக்கியம் என்ற வகைப்பாட்டில் அந்த நாட்டின் பங்களிப்பு என்பது மிகப் பெரும் அளவுக்கு மதிப்பிட வேண்டிய ஒன்று.ஆண்டன் செகாவ் என்ற ரஷ்ய இலக்கியப் படைப்பாளியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு பிறந்த தினம் ஜனவரி ௨௯ அன்று வருகிறது.அந்த தினம் கொண்டாடப் பட வேண்டிய ஒரு நாள்.அது தொடர்பாக சென்னை கூட்டாஞ்சோறு அரங்கு,த.மு.எ.ச.வும் சேர்ந்து நடத்திய நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அன்று பேசிய பேச்சு மிக அற்புதமான ஒன்று.ஒன்றரை மணி நேரம் அவர் பேசியதை குறிப்பு எடுத்து எழுத்து வடிவம் கொடுத்துப்பார்த்த வேளையில் அது பதினோரு பக்கக் கட்டுரையாக வந்தது.ராமகிருஷ்ணன் நண்பர்கள் அந்தப் பதிவை வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.கொடுத்தேன்.ஆண்டன் செகாவ் எழுதிய ஆறாம் வார்ட் நாவலையும் பொதுவாக சோவியத் இலக்கியங்களையும் பற்றி நானும் அன்று பேசினேன் என்றாலும் நிகழ்வின் சிகரமாக எஸ்.ரா.வின் பேச்சு அமைந்தது.செகாவின் பச்சோந்தி,அவரின் துயர மயமான வாழ்க்கை,ஆனால் அவருக்கு வாய்த்த அபாரமான நகைச்சுவை உணர்ச்சி,அவரை வதைத காச நோய்,அவர் எழுதிய இருநூட்றுஆறு சிறுகதைகள்,அவர் பார்த்த மருத்துவத் தொழில் மூலம் அவர் செய்த சேவை,டோல்ஸ்டோயும்,அவரும் ஆற்றிய சமூகப் பணிகள்,இறுதி வரை "மூணு ரூபிள்"டாக்டர் ஆகவே அவர் ஏழை மக்களுக்கு ஆற்றிய பணிகள் பற்றியெல்லாம் எஸ்.ரா.விவரித்த விதத்தில் அவையோர் கட்டுண்டு கிடந்தார்கள்.வாசிப்பு ஒரு சுகம் என்றால் வாசித்த உன்னதப் படைப்புகளைப் பற்றி அவற்றின் நயங்கள் ததும்ப எடுத்துச் சொல்லவும் அதைக் கேட்டு இன்புறவும் வைப்பது இன்னொரு சுகம்."மனிதர்களின் துயரங்கள் மொழிகடந்தவை.அவற்றைப் பற்றி எழுதியவர்கள் உன்னதப் படைப்பாளிகள்.ஆண்டன்செகவ் அப்படி ஒரு படைப்பாளி"என்று எஸ்.ரா.முடித்தவிதம் அற்புதம்...........!

1 comment:

  1. பகிர்விற்கு நன்றிகள் சார்(தோழரே).
    அன்று விழாவை அற்புதமாக நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நண்பர்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete