Monday, January 31, 2011

மாற்று வெளியும் மானுடமும்........

பழகிய தடம் பயணம் செய்ய ஏற்றது.அதில் ஆபத்து மிகக் குறைவு.பிரச்னைகளும் கம்மி.ஆனால் மாற்று வெளியில் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் ஏதேனும் ஒரு தடை வந்து கொண்டே இருக்கும்.யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.புரிந்து கொள்ள முயல் பவர்களும் முழுமையாகப் புரிந்து கொண்டு அனுசரணையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.இந்தப் பிரச்னைகள் எல்லாம் இருந்த போதும் மாற்று வழியில் பயணம் செய்ய எப்போது சிலர் முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள்.அவர்கள்தான் இந்த உலகில் புதியது புனைகிரவர்கள்.அந்தப் புதிய புனைவுகள்தான் இந்த உலகின் எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணம்.இன்று இலக்கிய வெளியில் மாற்று வெளி என்ற ஆய்வு இதழின் மூலம் வெளி வரும் படைப்புகளும் அப்படி புதிய சிந்தனைகளை நம் முன் வைக்கின்றன.இதுவரை வந்துள்ள ஆறு இதழ்களும் அவ்வாறே ஒவ்வொரு இதழிலும் ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்து ஆய்வுக் கட்டுரைகளை முன் வைக்கின்றன.கால்டுவெல் குறித்த கட்டுரைகள்;பொருளாதாரம்,கல்வி, ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,நாவல்படைப்புகள் குறித்த பதிவுகள்,மாற்றுப் பாலியல் .....இப்படி ஆறு பொருண்மைகள்.தமிழில் வந்துள்ள இவை வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவை. 

No comments:

Post a Comment