Sunday, November 22, 2009

iruttu enakkup pidikkum............!

இருட்டு என்றாலே எனக்குப் பயமாயிருக்கும் என்று நம்மில் பலர் பல சமயங்களில் சொல்வதுண்டு.இருள் என்பதை நாம் பயப்படும்படியான் விசயங்களுடனே சேர்த்துப் புரிந்து வைத்திருப்பதின் விளைவு இது.சிறு வயதில்  இருந்து நம் வீட்டுப் பெரியவர்களும் இருட்டிய பின் எங்கேயும் தனியாகப் போகக் கூடாது என்று நம்மை பயமுறுத்திக் கொண்டேதான் இருந்திருப்பார்கள்.நாம் கேள்விப்படும் பேய்க்கதைகளும்,கொலை , கொள்ளை போன்ற செய்திகளும் நமது பயத்தை இன்னும் அதிகப்பட்துகின்றன.ஆனால் இருட்டு என்பது நாம் விரும்பக் கூடிய ஒன்று என்று யாராவது சொன்னால் நீங்கள் அதை ஒப்புக் கொள்வீர்களா?இருளின் இனிமைகள் பற்றி யாரேனும் எழுதினாலோ பேசினாலோ அது சற்று வியப்புக்குரிய ஒன்றுதானே?தமிழின் நவீனஎழுத்தாளர்களில்சிறந்த ஒருவரும், ,"பூ' படத்தின் திரைக்கதைக்காக இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது பெற்றவருமான ச.தமிழ்ச்செல்வன் "இருட்டு எனக்குப் பிடிக்கும்"என்ற தலைப்பிலே ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்."இருள் என்பது குறைந்த velicham "என்று பாரதியின் ஒரு வரி சொல்லும்.ஜெயா மாதவன் என்கிற கவிஞர்,குழந்தை இலக்கிய படைப்பாளி எழுதி இருக்கும் கட்டுரை ஒன்றில் தான் இரவுகளை விரும்புவதாக எழுதி இருக்கிறார்.அவரின் வார்த்தைகளில் சொல்லும் இந்த உணர்வுகளைப் பாருங்கள்:"இருட்டியதும் பறவைகள் தம் கூடுகளில் அடைந்து விடுகின்றன.மாடு,கன்றுகள் வீடு திரும்பி விடுகின்றன.இரவு வானில் நிலவு மெல்ல எட்டிப் பார்க்கும்.அதனுடன் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் நம் மனதில்  இனம் புரியாத பரவசத்தை நிரப்பி விடுகின்றன. இரவின் ஓசைகள் நம் புலங்களில் ஒரு கூர்மையைக் கொண்டு வந்து விடுகின்றன.பகலில் நாம் தேவையோ தேவை இல்லாதவையோ ஏதானும் வேலைகளைச் செய்து கொண்டேதான் இருப்போம்.நமது உலகில் வெளிச்சத்தின் இயல்பு அது.அது நம்மை இயங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்.நம் வாழ்க்கைத்  தேவைகளுக்காக இந்த  மாதிரி  இயக்கம்  தேவையை  இருந்தாலும்  இரவின்  தனிமையில்  நாம்  வேறொரு  உலகில்  சஞ்சாரம்  செய்கிறோம் ........" இன்னும்  இப்படி  நிறைய  எழுதுகிறார்  அவர். ."இன்ப  இரவு " என்பது  பாரதிதாசன்  எழுதிய    கவிதை  naadakam.ippadiyaaka pala perum padaippaalikal iravai virumbum azakaip paarunkal.enakkum kooda iruttu pidikkum.unkalukku?                  

No comments:

Post a Comment