Tuesday, October 27, 2009

மதுர கவியும் முருகபூபதியும்..

தமிழ நாட்டின் கலை இலக்கியப் பிரமுகர்களில் பலரும் இந்திய தேசிய விடுதலைப் போரில்பங்கேற்றவர்கள்.நாடக மேடையிலும் திரைப்படங்களிலும் எழுத்துலகிலும் இசைத் துறையிலும் இப்படி பல துறை விர்ப்பன்னர்கள் தமது விடுதலை ஆர்வத்தை தங்களால் இயன்றவரை தமது துறை சார்ந்தும் மக்களுடன் இணைந்தும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மதுர கவி பாஸ்கர தாஸ்.தமிழ நாடக மேடைப் பாடல்கள்,தமிழ்சினிமாவின் முதல் பாடல் வரிசை,கிராமபோன் ரிக்கார்டுகள் ,என்று ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மதுரகவி,அவரதுடயரிக்  குறிப்புகளை மதுரகவியின் பேரனும் நவீனநாடகக்               கலைஞனும் ஆனா முருக பூபதி தொகுத்துத் தந்திருக்கிறார்.

அன்றைய நாடக உலகம்,அதன் கலைஞர்கள்,அவர்களின் அன்றாட வாழ்க்கை,செலவுகள்,சுக துக்கங்கள்,அவர்களின் கலை வேட்கை,மிடுதலை போரின் நடுவே தமது துறை சார்ந்தும்,வெளியிலும்,அவர்கள் இயங்கிய விதம் பற்றி இந்தக் குறிப்புகள் மிகச் சுருக்கமாகவும்,இயல்பாகவும்,உணர்ச்சி வசப் படாமலும் பேசுகின்றன.

அன்றைய தேசபக்தர்கள் மீது அந்நிய அரசு ஏவிய அடக்குமுறைகள் குறித்து மதுரகவியின் பாடல்கள் எதிர்வினை ஆற்றி இருக்கின்றன.டயரிக் குறிப்புகளில் இருந்து நாம் அன்றைய தமிழ நாடக மேடைக் கலாசாரம் பற்றி அறிய முடிகிறது,

No comments:

Post a Comment